பதிவு செய்த நாள்
28 மே2017
06:07
ஐதராபாத் : ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி யோச்சிரோ யுனோ கூறியதாவது:ஹோண்டா, மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தியா, மின்சார கார் போக்குவரத்திற்கு இன்னும் தயாராகவில்லை.போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை. மின்சார கார் விலை, பெட்ரோல், டீசல் கார்களின் விலையை விட இரு மடங்கு அதிகம் இருக்கும். இந்தியாவில், நியாயமான விலை உள்ள பொருட்களுக்குத் தான் வரவேற்பு இருக்கும். அதன்படி பார்த்தால், விலை அதிகம் உள்ள மின்சார கார்கள் பெருக, நீண்ட காலம் ஆகும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் அதிக காலம் பிடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ‘வரும், 2030ல் இந்தியா முழுவதும், மின்சார கார் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது’ என, சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|