பதிவு செய்த நாள்
28 மே2017
06:08
சண்டிகர் : ‘ரயில்வே மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய இரு துறைகளும், கட்டுமான சாதனங்கள் துறையின் வளர்ச்சிக்கு, பெருமளவில் உதவும்’ என தெரிவித்துள்ளது, ஜே.சி.பி., இந்தியா நிறுவனம்.ஜே.சி.பி., இந்தியா நிறுவனம், கட்டுமானம், மண் அகற்றல் உள்ளிட்ட வேலைகளுக்கு பயன்படும் சாதனங்களை தயாரித்து வருகிறது. கட்டுமான சாதனங்கள் துறை குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, விபின் சோந்தி கூறியதாவது:இந்த ஆண்டில் கட்டுமான சாதனங்களின் துறை வளர்ச்சி, 10 முதல் 15 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும், இது போதாது என்று தான் கூற வேண்டும்.ரயில்வே மற்றும் நீர்ப்பாசன துறைகள் அதன் திட்டங்களை அமல்படுத்த முனைந்தால், அது இந்த துறையின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். தற்போது, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறைகள் மூலமாகத் தான் கட்டுமான சாதனங்கள் துறை வளர்ச்சி கண்டு வருகிறது.ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், இத்துறை, 10 முதல் 15 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. 2016ம் ஆண்டில், இத்துறை 45 சதவீத வளர்ச்சியை எட்டியது. இதற்கு முடங்கிப் போன கொள்கைகள், நிலத்தை கையகப்படுத்துதலில் இருந்த சிக்கல்கள் ஆகியவற்றை காரணமாகச் சொல்லலாம்.எனினும், 2020ம் ஆண்டில் இத்துறையானது, சுமார், 39 ஆயிரம் கோடி ரூபாய் அதாவது, 6 பில்லியன் டாலர் கொண்டதாக இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|