ஐ.டி.சி., சந்தை மதிப்பு ரூ.10,872 கோடி அதிகரிப்புஐ.டி.சி., சந்தை மதிப்பு ரூ.10,872 கோடி அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ...
மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2017
06:11

புதுடில்லி : ‘தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,யால் பெறும் கூடு­தல் பயன்­களை நுகர்­வோ­ருக்கு வழங்­கி­டும் நோக்­கில், மொபைல்­போன் சேவை கட்­ட­ணத்தை குறைக்க வேண்­டும்’ என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.வரும், ஜூலை 1 முதல், நாடு முழு­வ­தும் ஒரே சீரான, ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அம­லுக்கு வர உள்­ளது.தற்­போது, தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ரி­டம், 14 சத­வீ­தம் சேவை வரி மற்­றும், ‘ஸ்வச் பாரத், கிரிஷி கல்­யாண்’ஆகிய திட்­டங்­க­ளுக்­காக தலா, 5 சத­வீ­தம் கூடு­தல் வரி வசூ­லிக்­கின்றன.திரும்ப பெறலாம்சரக்கு மற்­றும் சேவை வரி­யில், தொலைத்­தொ­டர்பு சேவைக்கு, 18 சத­வீ­தம் வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது.எனி­னும், இதில், மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­தப்­பட்ட வரியை, நிறு­வ­னங்­கள் திரும்­பப் பெற, வழி வகை செய்­யப்­பட்­டுள்­ளது.இது குறித்து அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், தற்­போ­தைய நடை­மு­றை­யில், சரக்­கு­க­ளுக்கு செலுத்­தும், ‘வாட்’ எனப்­படும் மதிப்பு கூட்டு வரியை திரும்­பப் பெற முடி­யாது. இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு செலுத்­திய சிறப்பு கூடு­தல் வரி­யை­யும் திரும்­பப் பெற வழி­யில்லை.ஆனால், ஜி.எஸ்.டி.,யில், தொலைத்­தொ­டர்பு சேவைக்கு விதிக்­கப்­பட்­டுள்ள, 18 சத­வீத வரி என்­பது, மதிப்பு கூட்­டப்­பட்ட வரி­யை­யும் உள்­ள­டக்­கி­யது என்­ப­தால், மூலப் பொருட்­க­ளுக்கு, நிறு­வ­னங்­கள் செலுத்­திய வரியை திரும்­பப் பெறும் வசதி உள்­ளது.அத்­தொகை, அவற்­றின் விற்­று­ மு­த­லில், 2 சத­வீத அள­விற்கு இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.கூடுதல் பயன்கள்மேலும், 2016ல், அகண்ட அலை­வ­ரிசை ஒதுக்­கீட்­டிற்­கான சேவை வரி­யில், மூலப் பொருட்­க­ளுக்­கான வரியை, தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள், மூன்று ஆண்­டு­களில் திரும்­பப் பெறும் வசதி தற்­போது உள்­ளது.ஆனால், ஜி.எஸ்.டி.,யில், மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­திய வரி முழு­வ­தை­யும், அந்த நிதி­யாண்­டிற்­குள்­ளா­கவே நிறு­வ­னங்­கள் பெற வகை செய்­யப்­பட்­டுள்­ளது.இத­னால், நடப்பு நிதி­யாண்­டி­லேயே, தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, அடுத்த இரண்டு ஆண்­டு­களில் கிடைக்க வேண்­டிய வரித் தொகை திரும்­பக் கிடைத்து விடும்.இந்த வகை­யில், கடந்த நிதி­யாண்­டில், தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள் செலுத்­திய வரி­யில், 87 சத­வீ­தம் மட்­டுமே, ஜி.எஸ்.டி.,யில் செலுத்த நேரி­டும்.இத்­த­கைய பயன்­களை கருத்­தில் கொண்டு, கூடு­த­லாக கிடைக்­கும் வரி ஆதா­யத்தை, மொபைல்­போன் சேவை கட்­ட­ணத்தை குறைப்­ப­தன் மூலம்,தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

ஜி.எஸ்.டி.,யில், தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, 0.7 – 1 சத­வீ­தம் தான் வரி ஆதா­யம் கிடைக்­கும். அரசு தவ­றாக மதிப்­பீடு செய்­துள்­ளது.ஜி.எஸ்.டி.,யால், மொபைல்­போன் சேவை கட்­ட­ணம் உய­ரும்ராஜன் மாத்­யூஸ், டைரக்­டர் ஜென­ரல், இந்­திய மொபைல்­போன் சேவை நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)