பதிவு செய்த நாள்
29 மே2017
05:00
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் ஆரம்ப நாட்களில் உயர்ந்து காணப்பட்டது. கடந்த, 2016 நவம்பரில் நடந்த கூட்டத்தில், ஜனவரி முதல் ஜூன் வரை, தினமும், 1.8 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவினை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை, 26 டாலரில் இருந்து, 52 டாலராக உயர்ந்தது. இருப்பினும், ஒபெக் நாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு, விலை உயரவில்லை. அதற்கு, ஆறு மாதங்களாக அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி மிகவும் அதிகரித்து, 9.2 மில்லியன் பேரல் நிலையை அடைந்தது தான் காரணம்.
கடந்த ஆண்டு, 316 ஆழ்குழாய் கிணறுகள் இயங்கி வந்த நிலையில், தற்போது, அது, 697 ஆக உயர்ந்துள்ளது. இதனால், சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.இச்சூழலில், கடந்த வாரம் நடைபெற்ற, ‘ஒபெக்’ கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில், அதிகப்படியான உற்பத்தி குறைப்பு குறித்த அறிவிப்பு வரும் என, எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், குறைப்பு அளவில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பை, மேலும் ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது. இதனால், சந்தையில் கச்சா எண்ணெய் விலை, 6 சதவீதம் குறைந்து, 49.5 டாலராக வர்த்தகம் முடிவடைந்தது. வரும் நாட்களில், கச்சா எண்ணெய் விலை, 46.80 டாலர் முதல், 51.50 டாலர் வரை வர்த்தகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 31.80 30.50 32.45 33.05என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 48.10 46.80 50.30 51.50
தங்கம், வெள்ளி
பொருள் வாணிப சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தொடர்ந்து மூன்றாவது வாரமாக உயர்ந்த நிலையில் முடிவடைந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் இந்திய சந்தையிலும் பிரதிபலித்தது.
மே 2 – 3ல் நடைபெற்ற, பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அறிக்கை, கடந்த புதன்கிழமை வெளிவந்தது. அதில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஜன., – மார்ச் வரையிலான, முதல் காலாண்டில், 0.7 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன், அமெரிக்க அரசியலில் எழுந்துள்ள குழப்பங்களும், அதிபரின் கொள்கை மீதான சர்ச்சைகளும், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு குறைய காரணம் ஆகின. இதனால், சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஆபரண சந்தையில், சீனாவின் இறக்குமதி, கடந்த மாதம், 33.5 சதவீதம் குறைந்துள்ளது.
ஜி – 7 நாடுகளின் கலந்தாய்வு, 26 – 27 தேதிகளில், இத்தாலியில் உள்ள சிசிலி தீவில் நடைபெற்றது. இவ்வாறான அசாதாரண சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை சிறிது உயர்ந்து வர்த்தகமானது. வரும் நாட்களில், தங்கத்தின் ரெசிஸ்டன்ட், 1,295 டாலர் ஆகும். வியாபார நிலையானது, 1,250 முதல் 1,280 டாலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளி, 16.80 டாலர் முதல் 18 டாலர் வரை வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம்
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூன்) 28,580 28,350 29,020 29,200காம்எக்ஸ் (டாலர்) 1255 1243 1278 1296
வெள்ளி
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஜூலை) 39,450 38,900 40,490 41,000காம்எக்ஸ் (டாலர்) 16.80 15.50 17.90 18.50
செம்பு
பொருள் வாணிபத்தில், கடந்த வாரம் செம்பின் விலை அதிகரித்து வர்த்தகமானது. எல்.எம்.இ., எனப்படும் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில், உலகளவில் தொழிற்சாலை மூலதனப் பொருட்களான இரும்பு, செம்பு, துத்தநாகம், கார்பன் போன்றவை வர்த்தகமாகின்றன. இந்திய சந்தையில் இவற்றின் வர்த்தகம் நடைபெறுகிறது. செம்பின் விலை உயர்வுக்கு, இந்தோனேஷியாவின் கிராஸ்பிரிக் சுரங்க தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் மற்றும் உற்பத்தி பாதிப்பு காரணமாகும்.
உலகளவில், இது ஒரு முதன்மையான சுரங்கம் ஆகும். இங்கு, 900 தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் பொருளாதார தொய்வு மற்றும் மூடிஸ் எனப்படும், கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி இதன் ரேட்டிங்கை, ஏ – 1 ஆக குறைத்தது. இதுவும், செம்பின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த உதவியது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 363.20 358 373 377
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|