மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்  மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்­தி­யாவில் ‘பிட்­காயின்’ தவிர்க்க முடி­யாத தலை­யெ­ழுத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
05:04

‘டிஜிட்டல் தங்கம்’ என்றும், ‘எதிர்­கால நாணயம்’ என்றும் சொல்­லப்­படும் பிட்­காயின் பற்றி பேசு­வ­தற்கு, இரண்டு கார­ணங்கள் சமீ­பத்தில் ஏற்­பட்­டு­விட்­டன. ஒன்று, ‘வான்­னாக்ரை’ என்ற பிணைத்­தொகை கோரும் வைரஸ், சில நாட்­க­ளுக்கு முன், உல­கெங்­கு­முள்ள பல கணி­னி­களைத் தாக்­கி­யது. கணி­னி­களை விடு­விக்க, ‘ஹேக்­கர்’கள் கோரி­யது, பிட்­கா­யின்­களை தான்.
இரண்­டா­வது, இந்­தி­யாவில் பிட்­காயின் போன்ற டிஜிட்டல் கரன்­சி­களைத் தடை செய்­ய­லாமா; நெறிப்­ப­டுத்­த­லாமா; சுயக்­கட்­டுப்­பா­டுடன் இயங்க அனு­ம­திக்­க­லாமா... என, மத்­திய அரசு பொது­மக்­க­ளிடம் கருத்து கேட்­டுள்­ளது. இந்­தி­யாவில் டிஜிட்டல் நாண­யங்கள் சட்­டப்­பூர்­வ­மா­னவை அல்ல. ஆனால், அது சட்­ட­வி­ரோ­த­மா­ன­வையும் அல்ல; யாரும் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற நேரடி கட்­டுப்­பாடு இல்லை. ‘எச்­ச­ரிக்­கை­யுடன் இருங்கள்’ என்­பது மட்­டுமே, ஆர்.பி.ஐ., அறி­வுரை.

இந்த குழப்­பத்­தையே வாய்ப்­பாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, மூன்று பிட்­காயின் பரி­வர்த்­தனை இணை­ய­த­ளங்கள் தோன்­றி­விட்­டன. சமீ­பத்தில், பிட்­காயின் ஒன்றின் விலை, 2,400 டாலரை (சுமார் ரூ.2 லட்­சத்­துக்கு மேல்) தொட்­ட­வுடன், ‘ஐயோ! நாம் பணம் சம்­பா­திக்கும் வாய்ப்பை தவ­ற­விட்டு விட்­டோமோ’ என, பல அப்­பாவி பொது­மக்­களும் பிட்­கா­யினில் முத­லீடு செய்­வதா – வேண்­டாமா என, பரி­த­விக்­கின்­றனர்.

ஜப்பான் அனு­மதி
இவர்­க­ளு­டைய ஆசையில் நெய்யை ஊற்­று­வது போல், வேறு சில சம்­ப­வங்­களும் நடை­பெற்­றுள்­ளன. ஏப்ரல் மாதம் முதல், பிட்­கா­யினில் முத­லீடு செய்ய ஜப்பான் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அமெ­ரிக்­காவில் பல வர்த்­தக நிறு­வ­னங்­களும், இ – காமர்ஸ் வலை­த­ளங்­களும் பிட்­கா­யின்­களை ஏற்­கின்­றன. போதும் போதா­தற்கு, பிட்­கா­யினைச் சுற்றி, ஏரா­ள­மான, ‘உடோ­பிய’ கற்­ப­னைகள். புகழ்­பெற்ற தொழில்­நுட்ப பெரிய தலை­களின் சாட்­சி­யங்கள்.இந்­திய அரசு கருத்து கேட்கத் துவங்­கி­ய­வுடன், விவாதம் சூடு­பி­டிக்கத் துவங்­கி­யுள்­ளது. தடை செய்­ய­லாமா என்று மட்டும் கேட்­காமல், நெறிப்­ப­டுத்­த­லாமா என்ற கேள்வி எழு­வதேன்... இதற்கு பின்னே இருக்கும் அர்த்தம் என்ன... இன்று வரை உல­கெங்கும் உரு­வாக்­கப்­பட்­டுள்ள எந்த ஒரு கரன்­சி­யையும், அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை, நகரும் பய­ணத்தைக் கண்­டு­பி­டிக்க முடி­யாது.

பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்கை என்­பதே, கறுப்புப் பணம் உரு­வா­வதைத் தடுக்க எடுக்­கப்­பட்­டது தானே! பணத்­தாள்கள் எங்கோ போய் பதுங்கிக் கொள்­கின்­றன; மறைக்­கப்­ப­டு­கின்­றன என்­பது தானே குற்­றச்­சாட்டு. இந்த தொல்லை டிஜிட்டல் கரன்­சியில் சாத்­தி­ய­மில்லை. ஒவ்­வொரு பிட்­கா­யினும், யாரிடம் இருக்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரியும். அதன் ஒவ்­வொரு கைமா­று­தலும் எண்­ணற்ற நபர்­களால் பதிவு செய்­யப்­ப­டு­கி­றது. இங்கே மறைக்க வாய்ப்பே இல்லை. ஒவ்­வொரு நாட்­டுக்கும் தவிர்க்க முடி­யாத தலை­யெ­ழுத்து பிட்­காயின். ஒரு­சில முத­லீட்­டா­ளர்கள், அரசின் எச்­ச­ரிக்­கை­க­ளையும் மீறி முத­லீடு செய்­கின்­றனர். அதில் ஏற்­படும் விலை ஏற்ற இறக்­கங்கள், சமூ­கத்­துக்குள் ஏற்­ப­டுத்தும் பொரு­ளா­தார பாதிப்­புகள் மிகப்­பெ­ரி­யவை.

சிறு முத­லீட்­டா­ளர்கள் முதற்­கொண்டு, பலரும் பிட்­காயின் ஜோதியில் கலக்க விரும்­பு­கின்­றனர். அவர்­க­ளு­டைய தொகைக்கு எந்­த­வி­த­மான பாது­காப்போ, வரு­வாய்க்­கான உத்­த­ர­வா­தமோ இல்­லாத ஊக­வ­ணி­க­மா­கவே டிஜிட்டல் கரன்சி உள்­ளது. இந்­நி­லையில், இதை தடை செய்­வ­தை­விட, ஏதேனும் ஒரு­வ­கையில் நெறிப்­ப­டுத்த வேண்­டிய தேவை அர­சு­க­ளுக்கு. அதனால் தான், ஜப்பான் பிட்­கா­யினைச் ‘சொத்து’ (Asset) என்று வரை­யறை செய்­தது, ‘நாண­ய’­மாகப் பயன்­ப­டுத்தச் சொல்­ல­வில்லை. மேலும், இந்தச் சொத்­துக்கு மூல­தன ஆதாய வரி­யையும் விதித்­துள்­ளது.

எப்­படி நெறிப்­ப­டுத்­த­வது? பிட்­கா­யினை நேராக பார்க்க முடி­யாது; தொட முடி­யாது; பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­தனால், அதற்கு நேர­டி­யான கட்­டுப்­பா­டு­களை விதிக்க வாய்ப்­பில்லை. ஆனால், நிஜ ரூபாய் உல­கத்­துக்கும், ‘டிஜிட்டல்’ நாணய உல­கத்­துக்கும் வாயி­லாகச் செயல்­ப­டு­பவை பிட்­காயின் எக்ஸ்­சேஞ்­சுகள், வலை­த­ளங்கள் ஆகி­யவை. இவற்­றுக்­கான கட்­டுப்­பாட்டு நெறி­களை மத்­திய ரிசர்வ் வங்கி கொண்டு வரலாம். போதிய நிதி ஆதா­ரங்­களை வைத்­தி­ருப்­பது, முத­லீட்­டா­ளர்­களின் வங்கிக் கணக்கு, ஆதார் எண், பான் எண் ஆகி­ய­வற்றைப் பெற்று கோப்­பு­களைப் பரா­ம­ரிப்­பது, சந்­தே­கத்­துக்­கு­ரிய முத­லீ­டு­களைத் தடுப்­பது, கணினி நெட்­வொர்க்­கு­களை ஹேக்­கர்­களின் தாக்­கு­தல்­களில் இருந்து பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது போன்ற செயல்­களை வலி­யு­றுத்­தலாம். அதா­வது, இப்­போ­தி­ருக்கும் பங்குச் சந்­தை­களைப் போல், பிட்­காயின் சந்­தை­யையும் கட்­டுப்­ப­டுத்­தலாம்.

ஆனால், இதில் உள்ள ஒரே சிக்கல். பிட்­காயின் சந்தை என்­பது ஒரு­மு­கப்­பட்­டது அல்ல. பிட்­காயின் என்­பது ஒரு டிஜிட்டல் கரன்சி மட்­டுமே. அதுபோல், எண்­ணற்ற கரன்­சிகள் புழக்­கத்­துக்கு வந்­து­விட்­டன. ஒவ்­வொ­ரு­வரும் வெவ்­வேறு எக்ஸ்­சேஞ்­சுகள் மூலம், பரி­வர்த்­த­னை­களில் ஈடு­ப­டு­கின்­றனர். இந்தச் சூழ்­நி­லையில் தான், சுயக்­கட்­டுப்­பாடு என்ற விஷயம் கவனம் பெறு­கி­றது. அதா­வது, டிஜிட்டல் நாண­யங்­களில் பணம் போடு­ப­வர்­களும், வலை­த­ளங்­களும், எக்ஸ்­சேஞ்­சு­களும் தமக்­குள்­ளேயே சுயக்­கட்­டுப்­பாட்டு நெறி­களை உரு­வாக்கிக் கொள்ள வாய்ப்பு வழங்­கப்­பட வேண்டும் என, குரல் எழுப்­பப்­ப­டு­கி­றது.

ஏற்­பரா இந்­தி­யர்கள்?
பிட்­காயின் என்­பதே வழக்­க­மான வங்­கி­யியல் நடை­மு­றை­க­ளுக்கும் அர­சாங்­கங்­களின் நெறி­மு­றை­க­ளுக்கும் சட்­டத்­திட்­டங்­க­ளுக்கும் வெளியே உரு­வான சர்­வ­தேச நாணயம். சொல்லப் போனால், பரஸ்­பர அவ­நம்­பிக்­கையில் (Mutual Mistrust) இயங்கும் நாணயம் இது. இதில் எல்­லா­ருமே சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­வர்கள். நம்­பிக்கை, நேர்மை, வெளிப்­ப­டைத்­தன்மை ஆகி­ய­வற்றை இதில் சம்­பந்­தப்­பட்ட தொழில்­நுட்ப வல்­லு­னர்­களே உரு­வாக்கிக் கொள்ள வேண்­டி­யது தான். தவ­று­களும் குறை­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­து போல், தீர்­வு­களும் கண்­டு­பி­டிக்­கப்­படும். இதில் அரசு நேர­டி­யாக தலை­யி­டாமல், ஒரு குறிப்­பிட்ட நிலையை அடையும் வரை, காத்­தி­ருக்க வேண்டும் என, கரு­து­கின்­றனர், ‘டிஜிட்டல்’ நாணய ஆர்­வ­லர்கள். அதற்குள் ஏரா­ள­மான அப்­பா­விகள் கஷ்­டப்­பட்டு சம்­பா­தித்த பணத்தை இழந்­து­விட்டால் என்ன செய்­வது என்ற அச்சம் எழா­ம­லில்லை.

ரூபாய் தாள்­களில் உள்ள தொகை என்­பது வெறும் எண் தான். அந்த எண்­ணுக்கு, மதிப்பும் உத்­த­ர­வா­தமும் வலு­வான அங்­கீ­கா­ரமும் தரு­வது, மத்­திய ரிசர்வ் வங்­கியும் இந்­திய அரசும் தான். இத்­த­கைய சட்ட ரீதி­யான அந்­தஸ்­துக்கு வெளியே இருப்­பவை, டிஜிட்டல் நாண­யங்கள். மேலை நாடு­களைப் போலல்­லாமல், பாது­காப்­பான முத­லீ­டு­களை விரும்­பு­பவர்கள் இந்­தி­யர்கள். அரசு எத்­த­கைய நெறி­மு­றை­களை ஏற்­ப­டுத்தித் தந்­தாலும், இந்­தி­யாவில் டிஜிட்டல் நாண­யங்­களை ஏற்­ப­வர்­களின் எண்­ணிக்கை சொற்­ப­மா­கவே இருக்கும்.!ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)