மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்  மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணம் மட்­டுமே இலக்கு அல்ல!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
05:06

ஓயாமல் வேலை செய்து கொண்­டி­ருப்­பதை விட, அள­வோடு வேலை செய்து வாழ்க்­கையை ரசிக்கும் வகையில், ஓய்வு நேரத்தை கைவசம் வைத்­தி­ருக்க வேண்டும் என்­கிறார் டிம் பெரிஸ். இதற்கான வழி­களை, ‘தி போர் ஹவர் ஒர்க்வீக்’ புத்­த­கத்தில் அவர் விவ­ரிக்­கிறார்:

ஓய்வு பெறுதல் என்­பது ஆயுள் காப்­பீடு போல பார்க்­கப்­பட வேண்டும். எதிர்­பா­ராத மோச­மான நிலைக்­கான பாது­காப்­பாக மட்­டுமே அது இருக்க வேண்டும். ஓய்­வு­பெ­று­தலை ஒரு இலக்­காக கொள்­வதன் மூலம், இது­வரை செய்து வரு­வதை விரும்­ப­வில்லை என ஒப்­புக்­கொள்­வது போல் ஆகி­றது. பெரும்­பா­லா­னோரால் ஓய்வு பெற்ற பின், அதே தரத்தில் வாழ முடி­யாது. ஓய்வு காலத்­திற்கு திட்­ட­மி­டலாம். ஆனால், அதுவே இலக்­காக இருக்க முடி­யாது. தினமும், 24 மணி நேரம் வேலை செய்தால், 10 ஆண்­டு­களில், பத்து கோடி கிடைக்கும் என்றால் அந்த வேலையை யாரேனும் விரும்­பு­வார்­களா? அதை தொடர்ந்து செய்ய முடி­யாது எனத்­தெ­ரியும். வேலை, ஓய்வு ஆகிய இரண்டும் தேவை. நன்­றாக வேலை செய்­து­விட்டு, இடையே உற்­சா­க­மாக ஓய்வு எடுத்­து ­கொள்­ளலாம்.

குறை­வாக செய்­வது என்­பது சோம்பல் அல்ல. அர்த்­த­மில்­லாத செயல்­களை குறைத்­துக் ­கொண்டு வாழ்க்கை இலக்­கு­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வற்றை செய்ய வேண்டும். பிசி­யாக இருப்­பதை விட செயல்­திற­னோடு இருப்­பதே முக்­கியம்.எதையும் செய்ய சரி­யான நேரம் என்று ஒன்று கிடை­யாது. விரும்­பி­யதை உடனே செய்­யுங்கள். விரும்­பி­யதை செய்ய ஏற்ற நேரம் வரும் என, காத்­தி­ருக்க வேண்டாம். சாதக பாதக அம்­சங்­களை யோசித்­துக் ­கொண்­டி­ருக்­காமல் செய்ய வேண்­டி­ய­வற்றை செய்தால் போதும். பெரும்­பா­லானோர் ஏதேனும் சில விஷ­யங்­களில் சிறந்து விளங்­குவர். ஆனால், பல விஷ­யங்­களில் மோச­மாக இருப்பர். பல­வீ­னங்கள் பற்றி கவ­லைப்­ப­டு­வதை விட்டு, உங்­க­ளிடம் உள்ள சிறந்த விஷ­யங்­களில் கவனம் செலுத்­துங்கள்.

பல­வீ­னங்­களை சரி செய்­வ­தை­விட பல­மாக உள்­ள­வற்றில் கவனம் செலுத்­து­வதே சிறந்­தது. எது­வுமே மிகை­யாக இருந்தால் அதன் இயல்பு தலை­கீ­ழாக மாறி­விடும். ஓய்வு நேரமும் அப்­படி தான். ஓய்வு நேரத்தை நல்ல முறையில் பயன்­ப­டுத்த வேண்டும். அது நஞ்­சாக மாறி­வி­டக்­கூ­டாது. பணம் ஒன்று மட்­டுமே தீர்­வல்ல. இன்னும் அதிக பணம் இருந்தால் எனும் மன­நிலை சரி­யா­னது அல்ல. பணத்தை ஒரு சாக்­காக வைத்­துக் ­கொண்டு, வாழ்நாள் முழு­வதும் வீண­டிக்­கவே இது வழி­வ­குக்கும். பணம் மட்­டுமே குறிக்கோள் அல்ல.

எவ்­வ­ளவு பணம் இருக்­கி­றது என்­பதை விட, அதை சம்­பா­திக்க எவ்­வ­ளவு நேரம் வேலை செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது என்­பதும் முக்­கியம். இலக்­கு­களை நிறை­வேற்­றக்­கூ­டிய அளவு பணம் போது­மா­னது.பல­வீ­ன­மாக, நம்­பிக்கை இல்­லாமல், விமர்­ச­னங்­களை எதிர்­கொள்ள முடி­யாமல் இருப்­பதை விட, செய்­வதை விரும்பி உற்­சா­க­மாக செய்­வது முக்­கியம். இதுவே முன்­னேற்­றத்­திற்கு வழி­வ­குக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)