மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல்  மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க அரசு வலியுறுத்தல் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆயுள் காப்­பீடு மீது கடன் பெற முடி­யுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
05:08

அவ­ச­ர­மாக பணம் தேவைப்­படும் சூழலில், கையில் பணம் இல்­லாத நிலையில், பல­வி­த­மான கடன் வச­தி­களை நாடலாம். தங்­கத்தை அட­மானம் வைத்து கடன் பெறலாம்; வைப்பு நிதி போன்ற சில முத­லீ­டுகள் மீதும் கடன் பெறலாம். இதே போல ஆயுள் காப்­பீடு பாலி­சிகள் மீதும் கடன் பெறும் வாய்ப்பு இருக்­கி­றது.எல்லா வகை­யான பாலி­சிகள் மீதும் கடன் பெற முடி­யாது. கடன் பெறு­வ­தற்­கான தகுதி உள்ள பாலி­சிகள் மீது மட்­டுமே கடன் பெறலாம். ‘டெர்ம் இன்­சூரன்ஸ்’ வகை பாலி­சிகள் மீது கடன் சாத்­தி­ய­மில்லை.

காப்­பீடு மற்றும் முத­லீடு அம்சம் கொண்ட எண்­டோமென்ட் மற்றும் மணிபேக் வகை பாலி­சி­களில் இது சாத்­தியம். யூலிப்கள் மீது கடன் வழங்க அனு­மதி இல்லை.பாலிசி எடுத்­த­வுடன் கடன் பெறு­வதும் சாத்­தி­ய­மில்லை. குறிப்­பிட்ட காலம் காத்­தி­ருக்க வேண்டும். பாலி­சிக்கு சரண்டர் மதிப்பு உண்­டா­கி­யி­ருக்க வேண்டும். பொது­வாக, வழக்­க­மான பாலி­சி­களில் 2 முதல் 3 ஆண்டு பிரீ­மி­யம்கள் செலுத்­திய பிறகே குறைந்­த­பட்ச சரண்டர் மதிப்பு உண்­டாகும். ஆரம்­பத்தில் இது மொத்த பிரீ­மி­யத்தில், 30 சத­வீ­த­மாக இருக்கும். அதன் பின் ஆண்­டு­தோறும் அதி­க­ரிக்கும்.

சரண்டர் மதிப்­பிற்கு எதி­ரா­கவே கடன் வழங்­கப்­படும். பொது­வாக இந்த மதிப்பில் 70 சத­வீதம் வரை கடன் பெறலாம். குறைந்த பட்ச உத்­தி­ர­வாத சரண்டர் மதிப்பு மற்றும் விசேஷ சரண்டர் மதிப்பு என, இரண்டு வகை உள்­ளன. பாலிசி மீதான கட­னுக்கு, 8 முதல் 10 சத­வீத வட்டி வசூ­லிக்­கப்­படும். ஆண்­டு­தோறும் வட்­டி­யேனும் கட்டி வர வேண்டும். பாலிசி காலம் வரை கடனை வைத்­தி­ருக்­கலாம். அசல் தொகையை செலுத்­தலாம் அல்­லது பாலிசி தொகையில் கழித்­துக் ­கொள்­ளவும் செய்­யலாம்.

பாலிசி அமலில் இருக்கும் வரை பணம் கட்டத் தவ­றி­னாலும், அசல் மற்றும் வட்­டியை விட பாலிசி மதிப்பு அதி­க­மாக இருந்தால், கடன் தொடரும். இல்லை எனில் பாலிசி முன்­கூட்­டியே முடிக்­கப்­பட்டு கடன் தொகை எடுத்­துக்­கொள்­ளப்­படும்.தவிர்க்க இய­லாத சூழ்­நி­லையில் மட்­டுமே இந்த வாய்ப்பை பயன்­படுத்­தலாம் என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். அதிலும் மற்ற கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம் அதி­க­மாக உள்ள நிலையில் மட்­டுமே நாட வேண்டும். ஆயுள் காப்­பீடு என்­பது நீண்ட கால பாது­காப்பு அளிப்­பது என்­பதை மனதில் கொள்ள வேண்டும். கடன் தொகை என்­பது சரண்டர் மதிப்பின் ஒரு பகுதி என்­பதால், இறு­தியில் பெறும் பலனும் குறை­வா­கவே இருக்கும் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)