பதிவு செய்த நாள்
30 மே2017
05:55
மும்பை : உள்நாட்டில், முன்னணி ஜவுளி விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது, ரேமண்ட் நிறுவனம். இந்நிறுவனம், தொழிற்சாலை திறன் அதிகரிப்பு, புதிய கடைகள் துவக்கும் பணிகளுக்காக, 350 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ஆப்ரிக்காவில் உள்ள எதியோப்பியாவில், ஆண்டுக்கு, 20 லட்சம், ‘கோட் சூட்’ தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. அந்த ஆலை, நடப்பாண்டில் செயல்பட துவங்கும். மஹாராஷ்டிர மாநிலம், அமராவதியில், கூடுதலாக, 30 லட்சம் மீ., பருத்தி நுாலிழை தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுகிறது. நடப்பாண்டில், 150 – 200 புதிய கடைகள் துவக்கப்படும். இந்த பணிகளுக்காக, 350 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில், 200 கோடி ரூபாய் ஆலையின் திறனை அதிகரிக்கவும், 150 கோடி ரூபாய் கடைகள் துவக்கவும் செலவிடப்படும். இதன் மூலம், நிறுவனத்தின் ஜவுளி விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|