பதிவு செய்த நாள்
30 மே2017
05:55
புதுடில்லி : ‘அசோசெம்’ எனப்படும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் ஜஜோடியா கூறியதாவது: இந்தியாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதாக கூறுவது ஒரு, ‘மாயை’ என்பேன். அதில் உண்மையில்லை. ஏனெனில், வெளிநாட்டு தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது, நம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் மிகக் குறைவானது. வெளிநாட்டில் ஒருவர் செய்யும் பணியை, நாம் செய்து முடிக்க, பலர் தேவைப்படுவர்.
மோசமான அடிப்படை கட்டமைப்பு, அதிகமான மின் கட்டணம், மிக உயர்வான வட்டி விகிதம் ஆகியவை பெரிய பிரச்னைகளாக உள்ளன. இந்திய தொழில் துறையில், போட்டித்தன்மை அடியோடு போய்விட்டது. நம் போட்டி யாளரை விட, அடிப்படை கட்டமைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து செலவினங்கள், பல மடங்கு அதிகமாக உள்ளன.
சுலபமாக தொழில் துவங்குவதில், இது போல பல இடர்ப்பாடுகள் தான் உள்ளன; பயன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. வங்கிகளின் வாராக்கடன்களை குறைத்தால், கடன் வளர்ச்சி அதிகரிக்கும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|