பதிவு செய்த நாள்
30 மே2017
05:56
புதுடில்லி : பாபா ராம்தேவின், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், எஸ்.கே.திஜரவாலா கூறியதாவது: ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு, தற்போதுள்ள, 7 சதவீத வரி, ஜூலை, 1ல் அறிமுகமாகும், ஜி.எஸ்.டி., திட்டத்தில், 12 சதவீதமாக உயர உள்ளது. சாதாரண மனிதர்களுக்கும் குறைந்த விலையில், ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் கிடைக்க வேண்டும் என, மத்திய அரசு கூறுகிறது. அதற்கு நேர்மாறாக, அதிக வரி விதிக்கப்படுகிறது. இது, ஏமாற்றம் அளிக்கிறது.
ஆரோக்கிய பராமரிப்பு செலவுகள் கைக்கு எட்டாத நிலையில் உயரும் போது, அரசு விளம்பரப்படுத்தும், ‘இன்று நல்ல நாள்’ என்பது, சாதாரண மக்களுக்கு எப்படி நல்ல நாளாக இருக்கும்.உலகளவில், ஆயுர்வேத பொருட்களை பிரபலப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், வரி உயர்வால், ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற, பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள், சாதாரண மனிதர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். இது, ஆயுர்வேத துறையையே நசுக்கிவிடும். ஆகவே, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|