பதிவு செய்த நாள்
30 மே2017
05:58
புதுடில்லி : ‘‘இந்தியா, அதிக அளவில் உருக்கை இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது அதன் ஏற்றுமதி அதிகரித்திருப்பது, உலகளவில் உருக்கு மையமாக இந்தியா உருவெடுப்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது,’’ என, இந்திய உருக்கு நிறுவனங்கள் கூட்டமைப்பின் செயல் தலைவர் சனக் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கைகளால், உருக்கு இறக்குமதி கடந்த நிதியாண்டு குறைந்தது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து, உருக்கு இறக்குமதியை விட, ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இந்தியா, தரமான உருக்கு பொருட்களை, குறித்த காலத்தில் ஏற்றுமதி செய்வதால், சர்வதேச சந்தையில், போட்டி நாடுகளை விஞ்சிய வரவேற்பை, பெற்று வருகிறது.
புதிய தொழிற்நுட்பம், நவீன சாதனங்கள், தானியங்கி செயல்பாடுகள், தரக் கட்டுப்பாடு போன்றவற்றால், இந்திய உருக்கு நிறுவனங்களால், உலக நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள முடிகிறது. இது ஒரு துவக்கம் தான். அதனால், இதோடு திருப்தி அடையாமல், ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி, 1.50 கோடி டன்னை எட்டும்பட்சத்தில், உலக நாடுகளின் கவனம் நம் பக்கம் திரும்பும். ஏற்றுமதியை அதிகரிக்க, புதிய சந்தைகளையும் அடையாளம் காண வேண்டும். இத்தகைய செயல்பாடுகள், இந்தியாவை, சர்வதேச உருக்கு மையமாக முன்னிறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்றுமதிகடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 10.12 கோடி டன்னாக இருந்தது. உருக்கு ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டை விட, 102.1 சதவீதம் அதிகரித்து, 82.44 லட்சம் டன்னாக இருந்தது.இதே காலத்தில் உருக்கு இறக்குமதி, 36.6 சதவீதம் குறைந்து, 74.27 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|