பதிவு செய்த நாள்
30 மே2017
17:54
மும்பை : கடந்த சில தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் தினம் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. இன்றைய வர்த்தகம் துவங்கும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. இருப்பினும் தென்மேற்கு பருவ மழை துவங்கியிருப்பதாலும், எதிர்பார்த்த மழையளவு இந்தாண்டு கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாலும், குறிப்பிட்ட சில பங்குகள் ஏற்றம் கண்டதாலும் வர்த்தகம் சரிவிலிருந்து மீண்டன. இறுதியில் உயர்வுடன் முடிந்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 50.12 புள்ளிகள் உயர்ந்து 31,159.40-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 19.65 புள்ளிகள் உயர்ந்து 9,624.55-ஆகவும் முடிந்தன. இதன்மூலம் இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளன. முன்னதாக நேற்று சென்செக்ஸ் 31,109.28-ஆகவும், நிப்டி 9,581.20-ஆகவும் இருந்தன. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தல் சென்செக்ஸ் 857.76 புள்ளிகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|