பதிவு செய்த நாள்
31 மே2017
04:54
கோயம்புத்துார் : உஜ்ஜிவன் நிதி சேவைகள் நிறுவனத்தின் துணை நிறுவனமான, உஜ்ஜிவன் சிறிய நிதி வங்கி நிறுவனம், அதன் சேவையை, தமிழகத்தின் ஐந்து இடங்களில் துவங்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சமித் கோஷ் கூறியதாவது: தமிழகத்தின் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார் காட்பாடி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில், ஐந்து கிளைகளை துவக்கி உள்ளோம். இந்த கிளைகளில் செயல்பாடுகள் துவங்கி உள்ளன.
தற்போது நிறுவனத்திற்கு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், 34 கிளைகள் உள்ளன. உஜ்ஜிவன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திற்கு, ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள, 24 மாவட்டங்களில், 56 கிளைகள் உள்ளன.
நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பிராந்தியங்களில், வங்கி சேவையை துவங்கி உள்ளோம். வரும் காலங்களில், நிறுவனத்தின் வங்கி சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம். வரும் ஐந்து ஆண்டுகளுக்குள், வங்கி துறையில், முன்னணி நிறுவனமாக உருவெடுக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|