பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
15:50
கோல்கட்டா : நாடு முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையிலும் பிரிட்ஜ் அல்லது ஏசி விற்பனை அதிகரிக்கவில்லை. மே மாதத்தில் பிரிட்ஜ் மற்றும் ஏசி விற்பனை 20 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
ஜூன் மாதத்தில் விற்பனை மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மே மாதத்தின் மத்தியில் பிரிட்ஜ், டிவி, ஏசி விற்பனை 40 சதவீதம் வரை சரிவடைந்தது. ஜிஎஸ்டி.,யில் ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்களுக்கு வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை அதிகம் என மக்கள் இவற்றை வாங்குவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பாகவே விற்பனை சரிந்து வருவதால், ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு விற்பனை கடுமையாக பாதிக்கும் என பானாசோனிக், பிலிப்ஸ், ஹிடாச்சி, வேல்டாஸ், ப்ளூ ஸ்டார், சாம்சங், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|