பதிவு செய்த நாள்
03 ஜூன்2017
01:19
புதுடில்லி : உலர் பழங்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அதிகமாக விதித்ததால், அவற்றை சட்ட விரோதமாக கடத்தி கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்திய உலர் பழ சந்தை, 4.25 லட்சம் டன் என்றளவில் உள்ளது. அதில், 80 சதவீதம், பாதாம் பருப்பு வகைகள். பெரும்பாலான உலர் பழ வகைகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மத்திய அரசு, உலர் பழங்களுக்கு, 12 சதவீதம், ஜி.எஸ்.டி.,யை நிர்ணயித்துள்ளது. இதனால், கடத்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சர்வதேச பருப்பு வகைகள் மற்றும் உலர் பழ கூட்டமைப்பினர் கூறியதாவது: இந்தியாவில், பல மாநிலங்களில், உலர் பழங்களுக்கான மதிப்பு கூட்டு வரி, 5 சதவீதம் என்றளவில் உள்ளது. எனவே, அந்த அளவிற்கே, ஜி.எஸ்.டி., இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.
ஏற்கனவே, உலர் பழங்களுக்கு, மிக அதிகளவில் அதாவது, 30 சதவீதம் அளவுக்கு சுங்க வரி செலுத்தப்படுகிறது. இப்போது, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதால், உண்மையான வர்த்தகம் ஒரு பக்கம் பாதிக்கப்படுவதோடு, இன்னொரு பக்கம், அரசுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும். அதாவது, 12 சதவீதம் வரி செலுத்துவதை தவிர்க்க, பலர் முறைகேடாக எல்லை பகுதிகள் மூலம் கடத்தி கொண்டு வர வாய்ப்புள்ளது. எனவே, உலர் பழங்களுக்கு குறைந்த வரி வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|