பதிவு செய்த நாள்
03 ஜூன்2017
01:21
புதுடில்லி : ‘சுகாதாரத் துறைக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி, மருந்துகள் பிரிவில் இருந்து, மருத்துவக் கருவிகளை பிரித்து, தனி சட்டம் இயற்ற வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, இந்திய மருத்துவ தொழிற்நுட்ப கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் பவன் சவுத்ரி கூறியதாவது: மத்திய அரசு, மக்களுக்கு அத்தியாவசியமான மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய மருந்துகள் விலையை குறைத்துள்ளது. அத்துடன், மருத்துவக் கருவிகள் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. மருந்துகளுக்கும், மருத்துவக் கருவிகளுக்கும் ஒரே அளவீட்டை, பயன்படுத்துவது சரியல்ல. மருத்துவக் கருவிகளை, தொழிற்நுட்பம் சார்ந்தவையாக மதிப்பிட வேண்டும். இதய நோயாளிகளுக்கு பொருத்தும், கரையும் தன்மையுள்ள, ‘ஸ்டென்ட்’ கருவிக்கு, தொழிற்நுட்ப அடிப்படையில், தனி விலை நிர்ணயிக்க வேண்டும்.
மருத்துவ தொழிற்நுட்பத் துறைக்கு, அதிக மூலதனம் தேவைப்படுகிறது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் கருவிகளின் நம்பகத்தன்மையை சோதித்து பார்க்க, நீண்ட காலம் தேவைப்படுகிறது. மருந்துகளை போல, மருத்துவ சாதனங்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், இப்பிரிவின் லாபம் குறைந்து வருகிறது. இதனால், இத்துறையில் புதிய முதலீடுகள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
எச்சரிக்கை:
மத்திய அரசு, 19 வகையான மருத்துவக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடம், தயாரிப்பு, விலை உள்ளிட்ட விபரங்களை வழங்குவதற்கான கெடுவை, வரும், 9 வரை நீட்டித்துள்ளது. விபரங்களை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|