பதிவு செய்த நாள்
03 ஜூன்2017
01:22
குறைந்த கமிஷன் தொகை தருவதை சுட்டிக்காட்டி, வர்த்தகர்கள் புறக்கணித்ததால், கடைகளில் இருந்து காணாமல் போன, தமிழக அரசின், உப்பு பாக்கெட்டுகள், மீண்டும் சந்தைக்கு வரவிருக்கின்றன.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு உப்பு நிறுவனம், ராமநாதபுரத்தில் உள்ள வாலிநோக்கத்தில், 5,000 ஏக்கர் பரப்பிலான உப்பளத்தில், உப்பு உற்பத்தி செய்து வருகிறது. அங்கு, ஆண்டுதோறும், 2 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கல் உப்பு, ஐயோடின் கலந்த உப்பு, சோடியம் குறைந்த உப்பு என, மூன்று வகைகள் தயாராகின்றன. அவை, ரேஷன் கடைகள் மூலம், ‘அம்மா உப்பு’ என்ற பெயரில், மிக குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், பொது சந்தைகளில், அதாவது, பொதுமக்கள் வாங்கும் கடைகளிலும், உப்பு பாக்கெட் சப்ளை செய்தோம். வணிகர்களுக்கு, ஒரு பாக்கெட்டிற்கு, 4 ரூபாய் கமிஷன் கொடுத்தோம். ஆனால், தனியார் நிறுவனங்கள், 9 ரூபாய் வரை கமிஷன் தந்ததால், அரசின் உப்பை விற்க வணிகர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அந்த கமிஷன் தொகையை, 7 ரூபாயாக உயர்த்தி, பொதுமக்களுக்கு கடைகளில் நேரடியாக மீண்டும் விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|