பதிவு செய்த நாள்
03 ஜூன்2017
01:22
ஐதராபாத் : ‘‘தெலுங்கானாவில், மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி, கடந்த மார்ச்சுடன் முடிந்த நிதிஆண்டில், 14 சதவீதம் உயர்ந்து, 85,470 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,’’ என, அம்மாநில, ஐ.டி., துறை அமைச்சர், கே.டி.ராமா ராவ் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: மாநிலத்தில், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தகவல் தொழிற்நுட்பம் சார்ந்த சேவைகள் ஏற்றுமதி, 2016 – 17ம் நிதியாண்டில், 13.85 சதவீதம் உயர்ந்து, 85,470 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2015 – 16ம் நிதியாண்டில், 75,070 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஓராண்டில், இத்துறை சார்ந்த தொழில்களில், 24,506 வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், இத்துறைகளில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை, 4,31,891 ஆக அதிகரித்துள்ளது. வரும், 2020க்குள், ஐ.டி., ஏற்றுமதி மதிப்பை, 1.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசு, ‘டி – வாலட்’ எனும், மின்னணு பணப்பை சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் எந்த நேரத்திலும், கூடுதல் கட்டணம் இல்லாமல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|