தெலுங்கானா ஐ.டி., துறை ஏற்றுமதி 85,470 கோடி ரூபாயாக அதிகரிப்புதெலுங்கானா ஐ.டி., துறை ஏற்றுமதி 85,470 கோடி ரூபாயாக அதிகரிப்பு ... அதிவேக தகவல் பதிவிறக்கத்தில் ஆர்ஜியோ தொடர்ந்து முதலிடம் அதிவேக தகவல் பதிவிறக்கத்தில் ஆர்ஜியோ தொடர்ந்து முதலிடம் ...
ஓராண்டுக்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்: ஆசிய ஆய்வில் இந்தியா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2017
01:23

மும்பை : சர்­வ­தேச ஆய்­வொன்­றில், இந்­தி­யா­வைச் சேர்ந்த, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், அடுத்த, 12 மாதங்­க­ளுக்கு, அவற்­றின் வர்த்­த­கம் சிறப்­பாக இருக்­கும் என, நம்­பிக்கை தெரி­வித்து, ஆசிய அள­வில் முத­லி­டத்தை பிடித்­துள்ளன.

அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­னம், நடப்­பாண்டு வர்த்­தக நில­வ­ரம் குறித்து, அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா உள்­ளிட்ட, 15 நாடு­க­ளைச் சேர்ந்த, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளி­டம் ஆய்வு நடத்­தி­யது.இந்­தி­யா­வில், ஆண்­டுக்கு, 9 கோடி டாலர் வரை விற்­று­மு­தலை கொண்ட நிறு­வ­னங்­கள், இந்த ஆய்­வில் பங்­கேற்­றன.

ஆய்­வ­றிக்கை விப­ரம்: இந்­திய நிறு­வ­னங்­கள், உல­க­ள­வி­லும், உள்­நாட்­டி­லும் பொரு­ளா­தா­ரம் நன்கு இருக்­கும் என, தெரி­வித்து உள்ளன. உள்­நாட்­டில், மத்­திய அர­சின் கொள்­கை­கள், ஊக்­கு­விப்பு திட்­டங்­கள், ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­க­ளால், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் வளர்ச்சி கண்டு வரு­வ­தாக, ஆய்­வில் பங்­கேற்­றோர் தெரி­வித்­த­னர்.

ஆசிய நாடு­க­ளி­லேயே, இந்­தியா தான், அடுத்த ஓராண்­டில், உள்­நாட்டு வர்த்­த­கம் நன்கு இருக்­கும் என, மிகுந்த நம்­பிக்கை தெரி­வித்து, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. இக்­க­ருத்தை, ஆய்­வில் பங்­கேற்ற, 71 சத­வீத நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. அடுத்த இடங்­களில், ஜப்­பான், சீனா, சிங்­கப்­பூர் ஆகிய நாடு­கள், முறையே, 62, 54 மற்­றும் 36 சத­வீ­தத்­து­டன் உள்ளன. தொழில் வளர்ச்சி நம்­பிக்­கை­யில், சர்­வ­தேச சரா­சரி அள­வான, 45 சத­வீ­தத்தை விட, ஆசி­யா­வின் பங்கு அதி­க­மாக உள்­ளது.

இந்­தாண்டு, வரு­வாய் மற்­றும் லாபம் அதி­கம் கிடைக்­கும்; வரு­வாய் வளர்ச்சி, குறைந்­த­பட்­சம், 4 சத­வீ­தம் இருக்­கும் என, இந்­திய நிறு­வ­னங்­கள் நம்­பிக்­கை­யு­டன் உள்ளன. இந்­தி­யா­வைச் சேர்ந்த, சிறிய,நடுத்­தர நிறு­வ­னங்­களில், 45 சத­வீத நிறு­வ­னங்­கள், 2020ல், ஆண்­டுக்கு, 8 சத­வீத லாப வளர்ச்சி எட்­டப்­படும் என, கூறி­யுள்ளன. இதே கருத்தை, சர்­வ­தேச அள­வில், 25 சத­வீத நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்ளன.

அடுத்த ஓராண்­டில், சொந்த வர்த்­த­கம் மற்­றும் நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி குறித்து, இந்­திய நிறு­வ­னங்­கள் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்ள போதி­லும், அதற்­க­டுத்த ஆண்­டில், ஒரு­சில கொள்­கை­கள், ஸ்தி­ர­மற்ற சட்­டம் மற்­றும் ஒழுங்­கு­மு­றை­க­ளால் பாதிக்­கப்­ப­ட­லாம் என, கவலை தெரி­வித்­துள்ளன. அடுத்த மூன்று ஆண்­டு­களில், உள்­நாட்டு வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்க உள்­ள­தாக, 38 சத­வீத நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன. விற்­பனை வளர்ச்சி மூலம், தற்­போ­தைய சந்தை பங்­க­ளிப்பை உயர்த்த திட்­ட­மிட்டு உள்­ள­தாக, 35 சத­வீத நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

சமா­ளிக்க கூடிய ஆற்­றல்:
இந்­தி­யா­வைச் சேர்ந்த, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளி­டம் காணப்­படும் நம்­பிக்கை, எதிர்­வ­ரும் எத்­த­கைய சவால்­க­ளை­யும் சமா­ளிக்­கக் கூடிய ஆற்­றல் ஆகி­யவை, அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் ஆய்­வின் மூலம் வெளிப்­பட்­டுள்­ளது.
– சாரு கவு­ஷால், துணைத் தலை­வர், குளோ­பல் கார்ப்­ப­ரேட் பேமன்ட்ஸ் பிரிவு, அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் இந்­தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)