பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:10
புதுடில்லி, ஜூன் 4–பொதுத் துறையைச் சேர்ந்த, என்.டி.பி.சி., நிறுவனம், மின் நிலைய திட்டங்கள், மின் உற்பத்தி உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், மின் வாகனங்களுக்கு, ‘சார்ஜ்’ செய்து கொடுக்கும் வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளது. முதன்முதலாக, டில்லி மற்றும் நொய்டாவில் உள்ள, என்.டி.பி.சி., அலுவலக வளாகங்களில், புதிய மின் சார்ஜ் மையங்கள் நேற்று திறக்கப்பட்டன.‘இதையடுத்து, பிற நகரங்களிலும் இது போன்ற மையங்கள் திறக்கப்படும்’ என, என்.டி.பி.சி., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்க, மின் வாகன தயாரிப்பை ஊக்குவிக்க திட்டமிட்டு உள்ளது.சமீபத்தில், மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசுகையில், ‘வரும், 2030ல், இந்தியா முழுவதும் மின் வாகன போக்குவரத்து மேற்கொள்ள, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அதிகளவில் மின் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும்’ என, தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|