பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:11
புதுடில்லி : ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2016 – 17ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 6.1 சதவீதமாக குறைந்துள்ளது.இது குறித்து, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியதாவது:கறுப்புப் பணத்தை ஒழிக்கவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், ரியல் எஸ்டேட் துறையில், 20 – 25 சதவீதம் விலை குறைந்துள்ளது. சீர்திருத்த திட்டங்கள் தான், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன என்ற போதிலும், இந்தியாவில் இந்த வளர்ச்சி சற்று தாமதமாக ஏற்படுகிறது.நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.5 சதவீதமாக உயரும். இது, 2019ல், 8 சதவீதமாக அதிகரிக்கும் என, திடமாக நம்புகிறேன். மத்திய அரசின் சீர்திருத்தங்களால், உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவை பெருகும்.ஏற்கனவே, 2015 – 16ல், நாம், 8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்டியுள்ளோம். மூன்று ஆண்டுகளில், சராசரியாக, 7 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம். எனவே, நம் இலக்கிற்கு, 1 சதவீத வளர்ச்சி மட்டுமே பற்றாக்குறையாக உள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில், எதிர்பார்த்த இலக்கு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு புள்ளி விபரம்மத்திய அரசு, மேலைநாடுகளில் உள்ளது போல, வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விபரங்களை தொகுக்கும் பணியை, ஏப்., முதல் துவக்கியுள்ளது. இதன் மூலம், காலாண்டுக்கு ஒருமுறை, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில், வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த புள்ளி விபரம் வெளியிடப்படும். வேலையிழப்பு ஏற்படும் என, வெளியான சமீபத்திய தகவல், அடிப்படை ஆதாரமற்றது.– அரவிந்த் பனகாரியா, துணைத் தலைவர், ‘நிடி ஆயோக்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|