பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:24
புதுடில்லி : கடந்த நிதியாண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சேவை குறைபாடு தொடர்பாக, அதன் கூட்டமைப்புக்கு, அதிக புகார்கள் சென்றுள்ளன.இந்தியாவில், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல், எச்.டி.எப்.சி., ரிலையன்ஸ், பிர்லா சன்லைப், எஸ்.பி.ஐ., ஆகியவை, முன்னணி மியூச்சுவல் பண்டு நிறுவனங்களாக உள்ளன. தற்போது, மியூச்சுவல் பண்டு திட்டங் களில், முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இத்தகைய முதலீட்டாளர்கள், பெயர், விலாசம் உள்ளிட்டவற்றில் காணப்படும் தவறுகள், வாரிசுதாரர் நியமனம் தொடர்பான குளறுபடிகள் போன்றவை தொடர்பாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம் புகார் அளிக்கின்றனர். இந்த வகையில், வாடிக்கையாளர்களின் விபரங்களை புதுப்பிக்காதது உள்ளிட்டவை தொடர்பாக, இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பிடம், 2016 – 17ல், 17 ஆயிரத்து, 569 புகார்கள் சென்றுள்ளன. இது முந்தைய நிதியாண்டில், 12 ஆயிரத்து, 579 ஆக இருந்தது.கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட மொத்த புகாரில், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு மீதான புகாரின் எண்ணிக்கை, 6,924 ஆக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|