பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:25
புதுடில்லி : எஸ்.பி.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, தொலை தொடர்பு துறைக்கு அனுப்பியுள்ள கடித விபரம்:தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், ஏற்கனவே வாங்கியுள்ள கடன்கள் தவிர, வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா சேவை உள்ளிட்ட சலுகைகளை வழங்க, கூடுதலாக கடன் வாங்கி வருகின்றன. போட்டி காரணமாக, அவற்றின் வருவாயும் குறைந்து உள்ளது.இந்நிறுவனங்கள், மொத்த வருவாயில், 30 சதவீதத்தை வரியாக செலுத்துகின்றன. அவற்றின் ஆண்டு நிகர வருவாய், 65 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கே உள்ளது. இத்தகைய சூழலில், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம், இந்நிறுவனங்கள் பெற்ற, 4 லட்சம் கோடி ரூபாய் கடனை, எந்த வகையில் திரும்பச் செலுத்தும் என, தெரியவில்லை.ஆகவே, இந்நிறுவனங்களின் கடன்களை பைசல் செய்ய, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவை, அலைக்கற்றை ஒதுக்கீட்டு தொகையை அரசுக்கு திரும்ப செலுத்தும் காலத்தை, 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். இந்நிறுவனங்கள், கடனை திரும்ப செலுத்த உரிய நடவடிக்கையை, தொலை தொடர்பு துறை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|