பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
07:40
வலைப்பின்னல் மார்க்கெட்டிங் துறைக்கு வழிகாட்டும் வகையில், ‘கொஸ்டீன்ஸ் ஆர் தி ஆன்சர்ஸ்’ எனும் புத்தகத்தை எழுதியுள்ள ஆலன் பீஸ், இதற்கான முதல் படியான வெற்றிக்கான, ஐந்து வழிகளை சுவாரஸ்யமாக விவரிக்கிறார்:
வெற்றி என்பது ஓர் ஆட்டம். அதை எத்தனை முறை விளையாடுகிறீர்களோ, அந்த அளவு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம். அதிக முறை வெற்றி பெற்றால், நீங்கள் வெற்றிகரமான ஆட்டக்காரர்களாவீர்கள் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். இதை வலைப்பின்னல் உத்திக்கும் பொருத்திப் பார்க்கலாம். அதிகமான மனிதர்களை, உங்களுடன் சேருமாறு தொடர்பு கொள்வதன் மூலம், அதிகமானவர்கள் உங்களுடன் இணைவர். எனவே முதல் விதி என்பது, அதிக மனிதர்களை சந்தித்துப் பேசுங்கள் என்பதாகும்.
நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கக்கூடிய எவரிடமும் பேசுங்கள். நீங்களாக ஏதாவது நினைத்துக் கொண்டு, நல்ல வாய்ப்பை தவறவிடுபவர்களாக இருக்க வேண்டாம். இவர்கள் மிகவும் வயதானவர்கள், மிகவும் பணக்காரர்கள் என்றெல்லாம் நினைத்து ஒதுங்க வேண்டாம்; எல்லாரிடமும் பேசுங்கள்.
அதிகமான மனிதர்களை சென்றுப் பாருங்கள் என்பது தான் இரண்டாவது விதி. இதுவே மூன்றாவது விதி. நீங்கள் நன்றாக பேசக்கூடியவராக இருக்கலாம், ஆனால், அதிக மனிதர்களை சந்திக்கா விட்டால், எந்த பலனும் இல்லை. எனவே, எல்லாரிடமும் பேசுங்கள். பெரும்பாலானோருக்கு தோல்வி ஏற்படுவது, பலரையும் சம்மதிக்க வைக்க முடியாததால் அல்ல, அதற்கேற்ப பலரை பார்க்காமல் இருப்பதே ஆகும். எல்லாரையும் சந்தித்துப் பேச முயற்சிக்கவும். இந்த மூன்று விதிகளை கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்.
சராசரி விதியில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்பது நான்காவது வழி. அதாவது, சில செயல்களை விடாமல், ஒரே விதமாக செய்து வந்தால், அவற்றுக்கான பலன் சீராக இருக்கும். காப்பீடு வாங்க விரும்பமா என கேட்டால், 56 பேர்களில், ஒருவர் ஆம் என பதில் சொல்வதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஆக, 168 பேரிடம் இந்த கேள்வியை கேட்க முடிந்தால், 3 பாலிசிகள் நிச்சயம். ஒவ்வொரு கதவாக தட்டிக் கொண்டிருந்தால், ஏதாவது ஒரு கதவு திறக்கும்.
உங்கள் சராசரி விகிதத்தை அதிகரிப்பது தான், ஐந்தாவது விதி. 10 பேரை சந்தித்து பேசினால், ஆறு பேர் ஆதரவாக பதில் அளிக்கலாம். ஆனால், இதற்கு எவ்வளவு நேரம் வேண்டும் என, பார்க்க வேண்டும். இது உண்மையில் திட்டமிடும் பிரச்னை தானே தவிர, விற்பனை செய்யும் பிரச்னை அல்ல. வெற்றி வாய்ப்பை அதிகமாக்க வேண்டும் எனில், அதற்கு எளிய வழி இருக்கிறது. அது வருங்கால வாடிக்கையாளர்களை இப்போதே பார்த்து பேசுவதாகும். அவர்களை முன்கூட்டியே பார்த்து பேசும் போது, எதையும் விற்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லை. அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு, அதை பின் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|