டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதிடுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குகளில் முத­லீடு செய்ய மக்கள் ஆர்வம்: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
08:00

கடந்த வாரமும், பங்­குச்­சந்தை புதிய உச்­சத்தை வெள்­ளி­யன்று எட்­டி­யது. சந்தை உயர, உயர உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் சந்­தையில் பணத்தை முத­லீடு செய்ய காட்டும் ஆர்வம் பெரு­கு­கி­றது. ஆனால், கடந்த வாரமும், எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்கள் இந்­திய பங்­கு­களை விற்­றனர்.

வியாழன் அன்று வெளி­வந்த ஜி.டி.பீ., வளர்ச்சி குறி­யீடு, குறை­வாக அமைந்­தது கூட சந்­தையில் எந்த இறக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. மாறாக, சந்தை ஏற்­றத்தை கண்­டது. இவ்­வாரம், ரிசர்வ் வங்­கியின் வட்­டி­வி­கிதம் மற்றும் கொள்கை அறி­விப்­புகள் வெளி­வர உள்­ளன. சில வாரங்­க­ளுக்கு முன், பண­வீக்கம் சார்ந்த புள்­ளி­வி­ப­ரங்கள், வட்டி விகி­தத்தை ரிசர்வ் வங்கி குறைப்­ப­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

ரிசர்வ் வங்கி:
ஜி.டி.பி., குன்­றிய சூழலில், வட்டி விகித குறைப்பு வளர்ச்­சிக்கு வித்­திடும் என, பொரு­ளா­தார பார்­வை­யா­ளர்கள் கூறு­கின்­றனர். அதே­ச­மயம், ரிசர்வ் வங்கி ஆளுனர், வட்டி குறைப்பு செய்­வ­தற்கு ஏற்ற சூழல் ஏற்­ப­டாது என, சில மாதங்­க­ளுக்கு முன் கூறி­யதை, இந்த புதிய சூழலில் மாற்றிக் கொள்­வாரா என்ற கேள்­விக்கு, வரும் வாரத்தில் விடை கிடைத்­து­விடும். வட்­டி­கு­றைப்பு ஏற்­பட்டால் அதை சந்தை பெரிதும் வர­வேற்கும் என்­பதில் சிறிதும் ஐய­மில்லை. ஏனெனில், அத்­த­கைய முடிவை சந்தை இப்­போது எதிர்ப்­பார்க்­க­வில்லை. எதிர்ப்­பா­ராத நேரத்தில், ஆச்­சர்­ய­மூட்டும் வகையில் வரும் பொரு­ளா­தார முடி­வுகள் பொரு­ளா­தா­ரத்­திற்கு சாத­க­மாக அமைந்தால், அதை சந்தை பெரிதும் வர­வேற்­பது இயற்கை.

பொரு­ளா­தார வளர்ச்சி மீண்டும் வேகம் பிடிக்க சில­காலம் ஆகும் என்­பதை நாம் தெளி­வாக புரிந்து கொள்­ள­வேண்டும். ரிசர்வ் வங்கி எடுக்கும் வட்டி­வி­கித முடிவு சந்­தையின் போக்கை நிச்­சயம் பாதிக்கும். அது சாத­கமா, அல்­லது பாத­கமா என்­பது வரும் வாரம் தெளி­வு­படும். ஜி.எஸ்.டி., அடுத்த மாதம் 1ம் தேதி அம­லுக்கு வர உள்ள நிலையில், நிறு­வ­னங்கள் தங்கள் உற்­பத்­தியை குறைத்து, கையி­ருப்பு பொருட்­களை குறைத்துக் கொள்ளும் நோக்­கத்­தோடு செயல்­படும்.

பருவ மழை:
ஆகவே, நிறு­வ­னங்­களின் உற்­பத்தி ஏப்ரல் ஜூன் காலக்­கட்­டத்தில் மந்­த­மா­கவே இருக்கும். இந்த காலக்­கட்­டத்தில், உற்­பத்தி பெருக்கம் ஏற்­ப­டாத ஒரு சூழ்­நிலை தற்­கா­லி­க­மாக நிலவும். ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்­த­வுடன், உற்­பத்தி மீண்டும் வேகம் பிடிக்கும். இதனால் பொரு­ளா­தார வளர்ச்சி இந்த நிதி ஆண்டில் வேகம் பிடிக்கும் என்­பதில் சிறிதும் ஐய­மில்லை. இதற்கு முக்­கிய காரணம், பருவ மழை உரிய காலத்தில், நாடு தழு­விய அளவில் பெய்யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன் தாக்கம், பல்­வேறு துறை­களில் வெளிப்­படும். இதன் எதிர்ப்­பார்ப்பு, முத­லீட்­டா­ளர்கள் மனதில் வளரத் துவங்­கி­யுள்­ளது. சந்­தையின் தொடர் உயர்வும், பொரு­ளா­தார போக்கின் மேல் ஏற்­படும் ஒரு­மித்த நம்­பிக்­கையை தெளி­வாக அறி­வு­றுத்­து­கின்­றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)