டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதிடுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உழைப்பு ஆர்­வத்தை குலைக்­கி­றதா அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
08:02

அமெ­ரிக்க ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மத்­தியில் பேசிய முகநுால் நிறு­வ­ன­ரான மார்க் ஜூகர்பர்க், ஒரு விவா­தத்­துக்கு மீண்டும் உயி­ரூட்­டி­யுள்ளார். பெருகி வரும் செயற்கை நுண்­ண­றிவு மற்றும் தானி­யங்கித் தொழிற்­நுட்­பங்கள் கார­ண­மாக, அடுத்த, 10, 20 ஆண்­டு­களில் வேலை­வாய்ப்­புகள் பெரு­ம­ளவு குறையப் போகின்­றன. வேலை­யில்லாத் திண்­டாட்டம் பெருகப் போகி­றது. அதனைச் சமா­ளிக்­கவும், மக்­களின் குறைந்­த­பட்ச வாழ்க்கைத் தரத்தை உறு­திப்­ப­டுத்­தவும், அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய் வழங்­க வேண்டும் என்­பதே அவ­ரது கருத்து.

அது என்ன அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய்?
அதைப் புரிந்­து­கொள்­வ­தற்கு முன் வேக­மாக வளர்ந்து வரும் தொழிற்­நுட்ப மாற்­றங்­களைப் புரிந்­து­கொள்வோம். ஓட்­டு­னர்கள் இல்­லாத மின்­சார கார்கள் இன்னும் சில ஆண்­டு­களில் புழக்­கத்­துக்கு வரப் போகின்­றன. ‘ஊபர்’ ஏற்­க­னவே இதனைச் சோதனை செய்து பார்த்­துள்­ளது. அது உலக அளவில், 20 சத­வீத மக்­களின் வேலை­வாய்ப்பைப் பறிக்கப் போகி­றது. அடுத்­தது, ரோபோக்கள். பல முன்­னணி கார் மற்றும் கன­ரக வாக­னங்கள் உற்­பத்தி மையங்­களில் ரோபோக்கள், மனி­தர்­களின் இடத்தைப் பிடித்­துக்­கொள்ளத் தொடங்­கி­யுள்­ளன. ஐ.டி., துறை சேவை­களில், வங்­கி­களில், சட்டத் துறையில், ஆயத்த ஆடைகள், கணினி மற்றும் உதிரி பாகங்கள் உற்­பத்­தியில் ஆட்­டோ­மேஷன் மேன்­மேலும் பெருகி வரு­கி­றது. பல ஆயிரம் பேர் செய்த வேலை­களை ஒரு­சில இயந்­தி­ரங்­களே மிகத் திற­மை­யா­கவும் செம்­மை­யா­கவும் செய்­கின்­றன. இத்­த­கைய முன்­னேற்­றங்கள், மனி­தர்­களின் வச­தியை மேம்­ப­டுத்­தலாம், ஆனால், அவர்­களை வேலை­யற்­ற­வர்­க­ளாக்கி, வீட்டில் முடக்கி வைக்கப் போவதும் உறுதி.

பழைய சிந்­த­னை­யாச்சே?
இந்தப் பின்­ன­ணியில் தான் ‘அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய்’ என்ற சிந்­தனை பிறக்­கி­றது. இந்த உலகம் இவ்­வ­ளவு துாரம் வளர்ந்­தி­ருக்­கி­றது என்றால், அதற்­கான உழைப்பை ஒவ்­வொரு தலை­மு­றையும் வழங்கி வந்­துள்­ளது. அனை­வ­ரது கூட்டு முயற்­சியின் பயனே இன்­றைய வளம். உலகில் பிறந்­துள்ள அனை­வரும் இந்த வளத்­துக்குச் சொந்­தக்­கா­ரர்கள். அதனால், அவர்கள் பசி­யின்றி வாழத் தேவை­யான வரு­வாயை அர­சாங்­கங்கள் வழங்க வேண்டும்.

இது ரொம்ப பழைய சிந்­த­னை­யாச்சே?
உண்­மைதான். ஆனால், இன்­றைய தொழிற்­நுட்ப வளர்ச்சி, இந்த இடத்­துக்கே நம்மை இட்டு வந்­துள்­ளது. விளைவு, அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய் வழங்­கு­வ­தற்­கான சோதனை முயற்­சி­களை பல நாடுகள் செய்து பார்க்­கின்­றன. பின்­லாந்து நாடு, 2,000 வேலை­யற்­ற­வர்­களைத் தேர்வு செய்து, அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மாதம்­தோறும் 560 யூரோ (40 ஆயிரம் ரூபாய்) வழங்­கு­கி­றது. கனடா, நெதர்­லாந்து, பார்­சி­லோனா ஆகிய நாடு­க­ளிலும் சோதனை முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. வேலை­யற்­ற­வர்கள், வேலை தேடிக்­கொண்­டாலும் அடிப்­படை வருவாய் அர­சாங்­கத்­திடம் இருந்து தொடர்ந்து கிடைக்கும்.

இதன் லாப நஷ்­டங்கள் விவா­திக்­கப்­ப­டு­கின்­றன. தொழில்­மு­னைவோர், கலை­ஞர்கள், பெண்கள், மாண­வர்கள் ஆகியோர் புதிய முயற்­சி­களில் தைரி­ய­மாக இறங்­கலாம். அவர்­க­ளுக்­கான அடிப்­படை வரு­வாய்க்கு உத்­த­ர­வாதம் இருப்­பதால் அடுத்த வேளை உண­வுக்குப் பயப்­படத் தேவை­யில்லை. உலக வளர்ச்சி என்­பதே தேவைக்கும் கிடைப்­ப­தற்கும் இடையே இருக்கும் ஏற்­றத்­தாழ்­வு­தானே? அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய் கிடைத்து விட்டால், ஏற்­றத்­தாழ்வு நீங்­கி­விடும், உழைப்­பார்வம் குறைந்­து­விடும், புதிய முயற்­சிகள் சுணங்­கி­விடும், சோம்­பே­றித்­தனம் பெரு­கி­விடும், பணத்­துக்கு மதிப்பே இருக்­காது என்று கரு­து­ப­வர்­களும் இருக்­கின்­றனர்.

அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய் வழங்க, அர­சாங்­கங்­க­ளிடம் போதிய நிதி இருக்­கி­றதா? நிதியைத் திரட்ட என்ன செய்யப் போகின்­றனர்... கூடுதல் வரி விதிப்­பார்­களா? அப்­ப­டி­யானால், இல்­லா­த­வர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காக, இருக்­கப்­பட்­ட­வர்­க­ளிடம் இருந்து அடித்துப் பிடுங்கும் திட்­டமா இது? வரிச் சலு­கைகள் தனியே வழங்­கப்­ப­டுமா? உண்­மையில், ‘அடிப்­படை வருவாய்’ என்­பது எவ்­வ­ளவு? இப்­போ­தி­ருக்கும் சமூகப் பாது­காப்புத் திட்­டங்­க­ளோடு சேர்ந்து அடிப்­படை வருவாய் வழங்­கப்­ப­டுமா? இல்லை, இது தனிச் செலவா? கேள்­விகள், கேள்­விகள், கேள்­வி­கள்தான் தோரணம் கட்­டு­கின்­றன.

இந்­திய அளவில் சாத்­தி­யமா?
கடந்த, ஜன­வரி மாதமே தலைமைப் பொரு­ளா­தார ஆலோ­சகர் அரவிந்த் சுப்­பி­ர­ம­ணியம், இதைப் பற்றிப் பேசி­யி­ருக்­கிறார். இந்­தி­யாவில், சுமார் 950 சமூக நலத் திட்­டங்கள் உள்­ளன. ஒன்றில் சுணக்கம் ஏற்­பட்­டாலும் மற்­றொன்றின் மூலம், ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு உத­விகள் போய்ச்­சேரும் என்­பதே நம்­பிக்கை. ஆனால், அப்­படி நடப்­ப­தில்லை என்று தெரி­விக்­கின்­றன பல ஆய்­வுகள். ஏரா­ள­மான ஓட்­டைகள், இடைத்­த­ர­கர்கள், தாம­தங்கள். இந்தப் பின்­ன­ணியில், அனைத்து சமூ­க­நலத் திட்­டங்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து, உரி­ய­வர்­க­ளுக்கு அடிப்­படை வரு­வாயை வழங்­கலாம் என்­பது யோசனை.

எவ்­வ­ளவு வழங்­கு­வது? இப்­போ­தைய சமூ­க­நலத் திட்­டங்கள் அனைத்தின் செலவு, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 5 சத­வி­கிதம். இத­னையே அடிப்­படை வரு­வா­யாக மாற்ற முடியும் என்­பதே அரவிந்த் சுப்­பி­ர­ம­ணியம் கருத்து. அதா­வது, ஒரு­வ­ருக்கு ஓராண்­டுக்கு 7,620 ரூபாய் வழங்­கலாம். சிறு­ந­க­ரத்தில் வேலை செய்யும் ஒரு­வ­ரது ஒரு மாத ஊதியம் கூட இல்­லாத இந்தத் தொகை ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­மானால், மிக­மோ­ச­மான ஏழ்­மையில் இருக்கும் 22 சத­வீ­தத்­தி­னரை, 0.5 சத­வீதம் அள­வுக்குக் குறைத்­து­விடும் என்­கிறார் அரவிந்த்.கடந்த, 2011ம் ஆண்­டி­லேயே அடிப்­படை வருவாய் தொடர்­பாக மத்­திய பிர­தேச கிரா­மங்­களில் சோதனை முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. அங்கே ஒவ்­வொரு பெரி­ய­வ­ருக்கும், 300 ரூபாயும், ஒவ்­வொரு சிறு­வ­ருக்கும், 150 ரூபாயும் வழங்­கப்­பட்­டன. அதன்­மூலம், அவர்­க­ளு­டைய வாழ்க்­கைத்­தரம் கணி­ச­மாக உயர்ந்­த­தாக இந்தச் சோத­னையை நடத்­திய யுனிசெப் மற்றும் சேவா அமைப்­பினர் தெரி­வித்­துள்­ளனர்.

முன்­னே­றிய நாடு­கள்ஆட்­டோ­மே­ஷனால் ஏரா­ள­மான வேலைகள் பறி­போகும் என்­பது அதீத மதிப்­பீடு என்­கிறார் டி.வி.மோகன்தாஸ் பாய். ஆட்­டோ­மேஷன் மற்றும் ரோபோக்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆரம்பச் செல­வுகள் மிக அதிகம். அதை­விட, பணி­யா­ளர்­களின் ஊதியம் குறைவு என்­பதால், இந்­தி­யாவில் ஆட்­டோ­மேஷன் விரை­வாக நடை­பெ­றாது என்­பது அவ­ரது கணிப்பு. வேலை போய்­விடும் என்ற பயத்தை உரு­வாக்­கு­வது தகவல் தொழிற்­நுட்­பத்தைச் சேர்ந்­த­வர்­களே. அதுவும் முன்­னே­றிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­களே. இந்­தியா போன்ற வளரும் நாடு­களின் உண்­மை­யான பொரு­ளா­தா­ரமும் வேலை­வாய்ப்­பு­களும், ஐ.டி., துறையை மட்­டுமே நம்­பி­யில்லை. அர­சாங்­கங்கள் தங்கள் கையா­லாகா தனத்தை, தொழிற்­நுட்ப முன்­னேற்­றங்­களின் மீது சுமத்­தி­விட்டு, பொறுப்­பு­களைத் தட்­டிக்­க­ழிக்க இத்­த­கைய கருத்­துகள் பயன்­ப­டலாம் என்ற அச்­சமும் எழுப்­பப்­ப­டு­கி­றது. அனை­வ­ருக்கும் அடிப்­படை வருவாய் என்­பது ஒரு­வ­கையில் இல­வசம். தன்­மா­னமும் சுய­ம­ரி­யாதை உள்ள எந்தச் சமூ­கமும் இல­வ­சத்தை ஏற்­குமா என்ன?!
ஆர்.வெங்­கடேஷ் பத்­தி­ரி­கை­யாளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)