முகேஷ் அம்பானியால் அனில் அம்பானிக்கு வந்த சோதனைமுகேஷ் அம்பானியால் அனில் அம்பானிக்கு வந்த சோதனை ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ...
புதிய ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பருத்தி ஜவுளிகள் விலை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2017
01:20

புதுடில்லி : பருத்தி, பருத்தி நுாலிழை மற்­றும் பருத்தி ஜவு­ளி­க­ளுக்கு, 5 சத­வீத, ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­பட்டு உள்­ள­தால், அவற்­றின் விலை அதி­க­ரிக்­கும் என, இத்­து­றை­யி­னர் அச்­சம் தெரி­வித்து உள்­ள­னர்.

தற்­போது, உற்­பத்தி வரி, சேவை வரி, விற்­பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்­ளிட்ட, 16 வகை­யான வரி விகி­தங்­கள் அம­லில் உள்ளன. இவ்­வரி­களை நீக்கி, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு திட்­டம், நாடு முழு­வ­தும், ஜூலை, 1 முதல் அம­லுக்கு வர உள்­ளது. சுதந்­திர இந்­தி­யா­வில், மிகப்­பெ­ரிய வரி சீர்­தி­ருத்­த­மாக கரு­தப்­படும் இத்­திட்­டம், பல்­வேறு பொருட்­களின் விலை குறை­ய­வும், அதி­க­ரிக்­க­வும் வழி­வ­குக்­கும். இந்த வகை­யில், ஜி.எஸ்.டி.,யால், பருத்தி ஜவு­ளி­களின் விலை அதி­க­ரிக்க உள்­ளது.

தற்­போது, பருத்தி, பருத்தி நுாலிழை மற்­றும் துணிக்கு வரி கிடை­யாது. ஒரு­சில மாநில அர­சு­கள் மட்­டும், 2 – 4 சத­வீ­தம் மதிப்பு கூட்டு வரி விதிக்­கின்றன. இந்­நி­லை­யில், ஜி.எஸ்.டி.,யில், பருத்தி, பருத்தி நுாலிழை, துணி மற்­றும் 1,000 ரூபாய்க்­குள் உள்ள பருத்தி ஆயத்த ஆடை­கள் ஆகி­ய­வற்­றுக்கு, 5 சத­வீத வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. 1,000 ரூபாய்க்கு மேற்­பட்ட ஆடை­க­ளுக்கு, 12 சத­வீத வரி; செயற்கை நுாலிழைக்கு, 18 சத­வீத வரி; செயற்கை நுாலிழை துணிக்கு, 5 சத­வீத வரி என, நிர்­ண­யம் செய்­யப்­பட்டு உள்­ளது. இந்த மாறு­பட்ட வரி விதிப்­பிற்கு, ஜவு­ளித் துறை­யில் ஆத­ர­வும், அதி­ருப்­தி­யும் நில­வு­கிறது.

இந்­திய ஜவு­ளித் துறை தலை­வர், ஜே.துள­சி­த­ரன் கூறு­கை­யில், ‘‘புதிய வரி விதிப்­பால், ஒட்­டு­மொத்த ஜவு­ளித் துறை பயன் பெறும்; ஆயத்த ஆடை­களின் விலை குறை­யும். இத­னால், நுகர்­வோர்­கள் பயன்பெறு­வர்,’’ என்­றார்.

‘‘கடந்த, 2004 முதல், பருத்தி ஜவுளி­கள், பூஜ்­ஜிய வரி விதிப்­பின் கீழ் உள்ளன. மாநில அர­சு­கள் விரும்­பி­னால், அவற்­றுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்­க­லாம். ஜி.எஸ்.டி.,யில் விதிக்­கப்­பட்­டுள்ள, 5 சத­வீத வரி­யால், அர­சுக்கு குறிப்­பி­டத்­தக்க வரு­வாய் கிடைக்­கும். அத்­து­டன், மதிப்பு கூட்­டப்­பட்ட ஜவு­ளித் துறை­யில், அதி­க­மா­னோரை வரி விதிப்­பின் கீழ் கொண்டு வந்து, சீரான வணிக நடை­மு­றைக்கு துணை புரி­யும். பிராண்­டட் ஆடை­க­ளுக்கு ஏற்­க­னவே, 12.5 சத­வீத வரி விதிப்பு உள்­ள­தால், ஜி.எஸ்.டி.,யால், நுகர்­வோ­ருக்கு எந்த பாதிப்­பும் ஏற்­ப­டாது,’’ என, தென்­னிந்­திய ஜவுளி ஆலை­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர், எம்.செந்­தில் குமார் கூறி­யுள்­ளார்.

குழப்பம் ஏற்படும்:
விரும்­பி­னால் மட்­டுமே, வரி விதிக்­கும் பிரி­வில் இருந்து கட்­டாய வரி முறைக்கு மாற்­றி­ய­தன் மூலம், பருத்தி ஆடை­களின் உற்­பத்­திச் செலவு அதி­க­ரிக்­கும். இத­னால், பருத்தி ஆடை­கள் விலை உய­ரும். ஜி.எஸ்.டி.,யில், ஆயத்த ஆடை­கள் பிரி­வுக்கு, ஒரே சீரான வரி விதிப்பை அமல்­ப­டுத்த வேண்­டும். பல்­வேறு வரி விகி­தங்­கள், வீண் குழப்­பங்­களுக்கு வழி­வ­குக்­கும்.
-அசோக் கே.ரஜனி,தலை­வர், ஆயத்த ஆடை­கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு குழு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)