பதிவு செய்த நாள்
07 ஜூன்2017
04:10
புதுடில்லி, ஜூன் 7–‘‘மக்களின் வரிப் பணத்தை வீணாக்கி, பெருங்கடனில் மூழ்கியுள்ள, ஏர் – இந்தியா நிறுவனத்தை காப்பாற்ற, அரசு விரும்பவில்லை,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் – இந்தியா நிறுவனம், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செயல்பட்ட, முந்தைய அரசு, ஏர் இந்தியாவை கை துாக்கி விட, 2012ல், 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியது. அதில், எந்த பலனும் கிட்டவில்லை.தொடர்ந்து இழப்பை கண்டு வரும் ஏர் – இந்தியா, தற்போது, மேலும், 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவிக்காக, மத்திய அரசிடம் கையேந்துகிறது.இத்தகைய சூழலில், ‘ஏர் – இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்குவது தான், சிறந்த வழி’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.இந்நிலையில், தனியார், ‘டிவி’க்கு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பேட்டி:இந்திய விமான போக்குவரத்து துறை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. தனியார் விமான சேவை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.ஆனால், பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் – இந்தியா, விமான போக்குவரத்து சந்தையில், வெறும், 14 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது.தொடர்ந்து இழப்பை கண்டு வரும் ஏர் – இந்தியா நிறுவனத்தில் இருந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பே, அரசு பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.இந்நிலையில், ஏர் – இந்தியாவின் தற்போதைய, 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, மக்களின் வரிப் பணத்தில் செலுத்த வேண்டும் என்பது, எந்த வகையில் நியாயமாக இருக்கும்?அதனால், ‘நிடி ஆயோக்’ பரிந்துரையை ஏற்பது தான் சரி என்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|