பதிவு செய்த நாள்
07 ஜூன்2017
04:12
மும்பை : ஜூலை, 1ல் அமலுக்கு வர உள்ள, ஜி.எஸ்.டி.,யில், தங்க நகைகளுக்கு, சிறப்பு பிரிவின் கீழ், 3 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.இதற்கு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் நிதின் கந்தன்வால் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி.,யில், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வரி விதிப்புகள் உள்ள நிலையில், தங்கத்திற்காக சிறப்பு பிரிவின் கீழ், 3 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், ஆபரணங்கள் துறை வளர்ச்சி அடையும்.கச்சா வைரங்களுக்கு, 0.25 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே, வைரங்களை பட்டை தீட்டும் தொழிலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதை கருத்தில் கொண்டு, கச்சா வைரங்களுக்கு, தற்போதைய பூஜ்ய வரி விகிதத்தையே, ஜி.எஸ்.டி.,யிலும் தொடர்ந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இதே போன்று, உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர், பி.ஆர்.சோமசுந்தரம், மனுபாய் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சமிர் சாகர் உள்ளிட்டோரும், மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|