பதிவு செய்த நாள்
08 ஜூன்2017
05:25
ஐதராபாத்: தேசிய ஜவுளி கொள்கை குறித்த வரைவை, மத்திய ஜவுளி அமைச்சகம் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்பணி நிறைவு பெற்றதும் வரைவை, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அடுத்த மாதம் அனுப்ப இருக்கிறது.
இது குறித்து, மத்திய ஜவுளி அமைச்சக கூடுதல் செயலர் புஷ்பா சுப்ரமணியம் கூறியதாவது: இந்தியா, கடந்த ஆண்டில், 4,000 கோடி டாலர் மதிப்புக்கு, ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. தேசிய ஜவுளி கொள்கைக்கு, வழிகாட்டி வரைவு இறுதி செய்யப்பட்டு வருகிறது. அவற்றுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, அடுத்த மாதம், மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும்.
புதிய கொள்கையின் மூலம், 2024 – 25ல், ஜவுளி ஏற்றுமதியை, 30 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கவும்; ஜவுளி தொழிலில், 3.50 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம், காந்தி நகரில், ஜூலையில், இந்திய ஜவுளித் துறையினர் பங்கேற்கும் கண்காட்சி நடக்க உள்ளது. அதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க வாய்ப்புள்ளது. தெலுங்கானா மாநிலம், வாரங்கலில், ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கு, தேவையான உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|