பதிவு செய்த நாள்
08 ஜூன்2017
05:27
புதுடில்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பு சந்தை மதிப்பு, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், அது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஜப்பான் சந்தையை விஞ்சும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பி.எம்.ஐ., ரீசர்ச் நிறுவனம், ஆசிய அடிப்படை கட்டமைப்பு துறை குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: மிகப்பெரிய அடிப்படை கட்டமைப்பு சந்தை கொண்ட ஆசிய நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இச்சந்தையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு ரொக்கத்தில் தான் கூலி வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில், 2016ல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், கட்டுமான துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும், இந்தாண்டு முதல் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், ஏராளமான கட்டமைப்பு திட்டங்கள், குடியிருப்பு மற்றும் குடியிருப்பு சாரா திட்டங்கள் வேகமெடுத்து உள்ளன. அதனால், இந்தாண்டு, இந்திய கட்டமைப்பு துறை வளர்ச்சி நன்கு இருக்கும்.
அதே சமயம், பெரிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதமும், அதிகரித்துள்ள திட்டச் செலவுகளும், வளர்ச்சிக்கு சவாலாக உள்ளன. சில மாநிலங்களில், நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட, சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், மோடி தலைமையிலான அரசு முன்னேற்றம் கண்டுள்ளது. பெருகி வரும் நகர்ப்புறங்களும், தொழில் நகரங்களும், இந்தியாவில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கான தேவையை உயர்த்தி உள்ளன. குறிப்பாக, சாலை, ரயில்வே, துறைமுகம், மின் வினியோகம், குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|