பதிவு செய்த நாள்
08 ஜூன்2017
05:28
மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை, நேற்று வெளியிடப்பட்டது. அதில், வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் பெறும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, குறைக்கப்படாமல், 6.25 சதவீதமாக நீடிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது போல, ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டியும், 6 சதவீதமாக தொடரும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், வங்கிகள், அரசு கடன் பத்திரங்களில் செய்ய வேண்டிய கட்டாய டிபாசிட் விகிதம், 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு, 20 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சில்லரை பணவீக்கத்திற்கான நடுத்தர கால இலக்கை எட்டவும், அதே சமயம் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், நிதிக் கொள்கை வெளியிடப் பட்டு உள்ளது.
தனியார் முதலீடுகளை ஊக்குவித்து, வங்கி துறைக்கு புத்துயிரூட்டி, அடிப்படை கட்டமைப்பில் உள்ள இடர்ப்பாடுகளை நீக்கும்பட்சத்தில், நிதிக் கொள்கையால் பெரும் பயன் கிடைக்கும். நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்கனவே மதிப்பிட்ட, 7.4 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|