பதிவு செய்த நாள்
08 ஜூன்2017
05:29
புதுடில்லி: ஐ.டி., சாதன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பான, எம்.ஏ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1ல் அறிமுகமாக உள்ளது.இதில், கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் புரொஜக்டர்களுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், கம்ப்யூட்டர்களுக்கு, 18 சதவீத வரி என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. கம்ப்யூட்டரின் ஓர் அங்கமாக உள்ள மானிட்டருக்கு மட்டும் வரியை உயர்த்தியுள்ளது சரியல்ல.
அது போல, ‘லான் – டேட்டா கேபிள்’ போன்ற, ஐ.டி., உதிரி பாகங்களுக்கு தற்போதைய, 17.5 சதவீத வரி, ஜி.எஸ்.டி.,யில், 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரின்டர், புரொஜக்டர் போன்ற சாதனங்களுக்கான வரி விதிப்பும் பாரபட்சமாக உள்ளது. இந்த குழப்பங்களுக்கு, நிதியமைச்சகம் உடனடியாக தீர்வு காண வேண்டும். அனைத்து, ஐ.டி., சாதனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு, ஒரே சீராக, 18 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும். இந்த சாதனங்கள், மத்திய அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் வெற்றிக்கு முக்கியம் என்பதால், அவற்றுக்கான வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|