பதிவு செய்த நாள்
09 ஜூன்2017
07:36
மும்பை: ரிலையன்ஸ் சொத்து மேலாண்மை நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது.
அனில் அம்பானி தலைமையில் செயல்படும், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட சொத்து நிர்வகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 3.60 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. அதில், மியூச்சுவல் பண்டின் பங்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய்.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிப்பான் லைப், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது. ஏற்கனவே, யு.டி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனமும், பங்கு வெளியீடு வாயிலாக, நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில், ரிலையன்ஸ் கேப்பிட்டல், 51 சதவீத பங்கை கொண்டுள்ளது. எங்கள் நிறுவன பங்கு வெளியீட்டுக்கு, இயக்குனர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டும் தொகை, நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|