பதிவு செய்த நாள்
09 ஜூன்2017
07:37
புதுடில்லி: நடப்பு ஆண்டில், தகவல் தொழிற்நுட்பங்களுக்கான பாதுகாப்பு குறித்த பயிற்சிக்கு, அதிகளவில், இந்திய நிறுவனங்கள் செலவு செய்யும் என, ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது.
தகவல் தொழிற்நுட்பத்தில் பாதுகாப்பு தீர்வுகள் வழங்கும் நிறுவனமான, சிமேன்டெக் அண்டு வேக்பீல்டு நிறுவனம், 11 நாடுகளில் உள்ள, தகவல் தொழிற்நுட்பத் துறையைச் சேர்ந்த, 1,100 நிறுவனங்களின், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளிடம், ‘சர்வே’ எடுத்துள்ளது.
இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: புதிய ஊழியர்கள் சராசரியாக, 20 மணி நேரம் தகவல் பாதுகாப்பு பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளில், 91 சதவீதம் பேர், மேகக் கணினி குறித்த விவகாரங்களில், மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக தெரிவித்து உள்ளனர். மேகக் கணினி சேவைகளில், போதிய பாதுகாப்புகளை ஏற்படுத்த தவறும் போது, அது பெரும் பொருட்செலவையும், வணிகத்தில் நஷ்டத்தையும் ஏற்படுத்தி விடுவதாக, அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இப்பிரச்னைகளிலிருந்து மீள, புதிய வடிவிலான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுவனங்களுக்கு தேவை எனவும் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், தகவல் பாதுகாப்பு பயிற்சிக்கான செலவு, நடப்பு ஆண்டில் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|