பதிவு செய்த நாள்
10 ஜூன்2017
06:41
புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவின் தலைவர், கஜேந்திரா எஸ்.சந்தல் கூறியதாவது: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில், அனைத்து ஊழியர்களும் பங்கேற்கும் நோக்கில், பதவிகளில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி, துணைத் தலைவர், பொது மேலாளர், பிராந்திய விற்பனை மேலாளர், பகுதி மேலாளர் போன்ற பதவிகள் நீக்கப்படும்.
அதற்கு பதிலாக, ஒருவரின் பணி மற்றும் பொறுப்பு என்ற இரு அம்சங்களை குறிக்கும் பதவி பெயர்கள் பயன்படுத்தப்படும். உதாரணமாக, நடுத்தர மற்றும் கனரக வாகன பிரிவைச் சேர்ந்த ஊழியருக்கு, அவர் விற்பனையில் இருந்தால், ‘விற்பனை – கனரக வாகன பிரிவு’ என, பதவி பெயர் குறிக்கப்படும்.
புனேவில் உள்ள பெயின்ட் பிரிவு அல்லது ஜாம்ஷெட்பூர் ஆலை போன்ற வற்றுக்கு தலைமை வகிப்பவர், ‘தலைமை அதிகாரி’ என, அழைக்கப்படுவார். இந்த வகையில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களின் பதவி பெயர்கள் மாற்றம் செய்யப்படும். ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே சீரான பொறுப்பு மற்றும் அதிகாரத்தை அளிக்கவும், நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிக பங்களிப்பை வழங்கவும், இந்த சீர்திருத்தம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|