பதிவு செய்த நாள்
12 ஜூன்2017
04:15
பொருளாதார சவால்கள் தங்களது ஓய்வுகாலத்தை பாதிக்கும் என, 1980 முதல் 1997 வரையான காலத்தில் பிறந்த புத்தாயிரமாண்டு தலைமுறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஓய்வு காலத்தின் வருங்காலம் எனும் இந்த ஆய்வில் புத்தாயிரமாண்டு தலைமுறையினர் மத்தியில் நிலவும் கவலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை வருமாறு: 52 சதவீதம் பேர், முந்தைய தலைமுறை வளர்ச்சியை விட, தங்கள் தலைமுறை பலவீனமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முந்தைய தலைமுறை பொருளாதார முடிவுகள் தங்களை பாதிப்பதாக, 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நிறுவனங்களின் ஓய்வூதிய திட்டங்கள் பலன் அளிக்காது என, 46 சதவீதம் பேர் அஞ்சுகின்றனர்.
இந்த தலைமுறையினர் பொதுவாக, 27 வயதில் சேமிக்கத் துவங்குகின்றனர். 13 சதவீதம் பேர் இன்னும் சேமிக்கத் துவங்கவில்லை என தெரிவித்துள்ளனர். 68 சதவீதம் பேர் தங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டு எதிர்காலத்திற்காக அதிகம் சேமிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். செலவுகளை குறைப்பது கடினம் என்றாலும், அவசியம் என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களில் பலர் நீண்ட கால பலனுக்காக, ‘ரிஸ்க்’ மிகுந்த முதலீட்டு வாய்ப்புகளை நாட தயாராக உள்ளனர். பெரும்பாலானோர் முறையான நிதி ஆலோசனையை நாட தயாராக உள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|