23  சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள்  23 சதவீத வளர்ச்சியை எட்டிய இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ...
வரு­மான வரித் தாக்­கலில் தாமதம் வேண்டாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
04:16

வரு­மான வரி வரம்­பிற்குள் வருவோர், வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்­வது அவ­சி­ய­மா­னது. ஜூலை 31ம் தேதிக்குள், இதை செய்ய வேண்டும். வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்­வதை தாம­தப்­ப­டுத்­தாமல், உரிய நேரத்தில் தாக்கல் செய்­வதன் மூலம், பல்­வேறு அனு­கூ­லங்­க­ளையும் பெறலாம். முன்­கூட்­டியே வரு­மான வரித் தாக்கல் செய்­வதால் கிடைக்கும் பலன்கள் இவை:

ரீபண்ட்: கூடு­த­லாக பிடிக்­கப்­பட்ட அல்­லது செலுத்­தப்­பட்ட வரியை திரும்ப கோரு­வ­தாக இருந்தால், முன்­கூட்­டியே வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, ரீபண்ட் விரை­வாக கிடைக்கும் வாய்ப்­புள்­ளது. வரி மிச்­ச­முள்ள படி­வங்­களை பரி­சீ­லிப்­பதை விட, ரீபண்­டிற்­கான படி­வங்­களை பரி­சீ­லிக்க அதிக அவ­காசம் தேவைப்­ப­டு­வதே இதற்கு காரணம். மேலும், செலுத்த வேண்­டிய வரியை விட, ரீபண்ட், 10 சத­வீ­தத்­திற்கு மேல் இருந்தால், வரிக் கணக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ரீபண்ட் மீது, 6 சத­வீத வட்டி வழங்­கப்­படும். தாம­த­மாக செலுத்தும் போது இந்த பலன்­களை பெற முடி­யாது.

ஆவ­ணங்கள்: முன்­கூட்­டியே வரி விஷ­யங்­களில் கவனம் செலுத்­து­வதன் மூலம் தொடர்­பு­டைய ஆவ­ணங்­களை சேக­ரிக்க போது­மான நேரம் கிடைக்கும். படிவம் 16, படிவம் 26 ஏ, கடன் சான்­றிதழ், வட்டி விபரம் போன்­ற­வற்றை பர­ப­ரப்­பில்­லாமல் திரட்­டலாம். இவற்­றுக்­காக கடைசி நேரத்தில் அல்­லாட வேண்டாம்.தவ­றுகள் திருத்தம்: வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது, எவ்­வ­ளவு தான் கவ­ன­மாக இருந்­தாலும், சில நேரங்­களில் ஏதேனும் தவறு செய்ய வாய்ப்­பி­ருக்­கி­றது. உரிய நேரத்தில் வரு­மான வரிக் கணக்கு தாக்கல் செய்­தி­ருந்தால், இத்­த­கையை தவ­று­களை திருத்தி, அடுத்த ஆண்டு, ஜூலை 31ம் தேதிக்குள் மீண்டும் தாக்கல் செய்­யலாம். ஏதேனும் சான்­றி­தழை சேர்க்க மறந்­தி­ருந்தால் அல்­லது குறிப்­பிட்ட வரி தள்­ளு­ப­டியை கோர தவ­றி­இ­ருந்தால் சரி செய்து கொள்­ளலாம். தாம­த­மாக தாக்கல் செய்யும் போது இந்த வாய்ப்பு கிடை­யாது.

அப­ராதம்: குறிப்­பிட்ட கெடு­வுக்குள் மதிப்­பீட்டு ஆண்­டுக்­கான வரு­மான வரிக் கணக்கை தாக்கல் செய்­யா­விட்டால் இப்­போது அப­ரா­தமும் விதிக்க வழி செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்கு வட்­டியும் விதிக்­கப்­படும். குறித்த நேரத்தில் தாக்கல் செய்தால் அப­ராதம் பற்றி எல்லாம் கவ­லைப்­பட வேண்டாம். மேலும், தொழில்­முறை உத­வியை நாடும் போது வல்­லு­னர்­க­ளுக்கு உங்கள் கணக்கை கவ­னிக்க போதிய அவ­கா­சமும் கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)