பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
03:23
மும்பை : ‘அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு சந்தையின் மதிப்பு, 1,000 கோடி டாலரை எட்டும்’ என, இந்திய அழகு மற்றும் சுகாதார கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்த கூட்டமைப்பினர் கூறியதாவது: உடல், முகம், தலைமுடி, கை ஆகியவற்றின் பராமரிப்புகளை உள்ளடக்கியது, அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு துறை. தற்போது, ஒவ்வொரு நபரும், தங்களை அழகாக காட்டுவதை விட, அழகானவர்களாக நினைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால், பலரும், அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புக்கான பொருட்களை பயன்படுத்தி வருவதால், இந்த துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, உடல் பராமரிப்பு பிரிவு ஆண்டுக்கு, 4 சதவீதமும்; வண்ண ஒப்பனை பிரிவு, 12 சதவீதமும் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, கிராமங்களில் வசிக்கும் மக்களும், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இத்துறையில், இந்தியர்களின் தனிநபர் செலவு, மிக குறைவாகவே (சராசரியாக 450 ரூபாய்) உள்ளது.வரும், 2021ல், இத்துறையின் சந்தை மதிப்பு, 1,000 கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|