பதிவு செய்த நாள்
14 ஜூன்2017
17:33
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக தள்ளாட்டத்துடன் காணப்பட்ட நிலையில் வர்த்தகநேர முடிவில் உயர்வுடன் முடிந்தன.அமெரிக்காவின் பெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் நடந்துள்ள நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சில முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகள் அதிக ஏற்றம் கண்டன. அதன்வெளிப்பாடாக இந்திய உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டன. இதனால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. இருப்பினும் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் சற்றுநேரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. இதனால் பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்தன. வங்கி, மருத்துவம் சார்ந்த பங்குகள் உள்ளிட்ட முக்கிய பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் நிறைவடைந்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 52.42 புள்ளிகள் உயர்ந்து 31,155.91-ஆகவும், நிப்டி 11.25 புள்ளிகள் உயர்ந்து 9,618.15-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|