பதிவு செய்த நாள்
14 ஜூன்2017
23:48
புதுடில்லி : சுரங்கம், வேளாண் துறைகளில் முதலீடு செய்ய வருமாறு, இந்திய தொழில் நிறுவனங்களுக்கு, அங்கோலா அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தென் ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றாக, அங்கோலா உள்ளது. இந்நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் ஆப்ரஹா பியோ தாஸ் சான்டோஸ் கவுர்ஜெல், இந்தியா வந்துள்ளார். அவர், இந்திய முதலீட்டாளர்களை சந்தித்து, அங்கோலாவில் தொழில் துவக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: இந்தியா – அங்கோலா நாடுகளுக்கு இடையில், பரஸ்பர வணிகம் சிறப்பாக உள்ளது. அங்கோலாவில், வேளாண், உணவு பதப்படுத்துதல், குளிர்பானம், சுரங்கம், போக்குவரத்து மற்றும் சரக்கு மேலாண்மை ஆகிய தொழில் துறைகளில், அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்திய தொழில் நிறுவனங்கள், மேற்கண்ட துறைகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அவர்களுக்கு, தொழில் துவக்குவதற்கான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|