பதிவு செய்த நாள்
14 ஜூன்2017
23:48
புதுடில்லி : மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதாவது: அறுவடைக்கு பின்னும், போக்குவரத்திலும் வேளாண் பொருட்கள் பாழாவதை குறைக்க வேண்டும். இதற்கு, உணவு பதப்படுத்துதல் துறையில், அதிக முதலீடு தேவைப்படுகிறது. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தியில், இந்தியா முன்னணியில் உள்ள போதிலும், அவற்றில், 10 சதவீதம் மட்டுமே பதப்படுத்தப்படுகிறது.
அன்னிய முதலீடு மூலம், உணவு பதப்படுத்துதல் துறைக்கு, புதிய தொழிற்நுட்பங்கள், பொருட்கள், சந்தைகள் ஆகியவை கிடைக்கும். இந்த வகையில், உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனையில், ‘அமேசான், கிராபர்ஸ், பிக் பேஸ்கட்’ ஆகிய நிறுவனங்கள், 69.50 கோடி டாலர் முதலீட்டு திட்டங்களை, அரசுக்கு அளித்துள்ளன. அதில், எப்.ஐ.பி.பி., அமைப்பு கலைக்கப்பட்டதால், அமேசான் நிறுவனத்தின், 50 கோடி டாலர் முதலீட்டு திட்டத்திற்கு, அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெகு விரைவில், அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|