பதிவு செய்த நாள்
14 ஜூன்2017
23:51
மும்பை : ‘இந்தியாவில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில், 12 வங்கிகள் தான், வாடிக்கையாளர் சேவையில் சிறப்பாக செயல்படுகின்றன’ என, வங்கி நடைமுறைகள் மற்றும் தரக் கட்டுப்பாடு வாரியமான – பி.சி.எஸ்.பி.ஐ., தெரிவித்து உள்ளது.
இந்த அமைப்பு, வங்கி நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், வங்கி செயல்பாடுகளின் தரத்தை உயர்த்தவும், வங்கி –வாடிக்கையாளர் இடையே, சுமுக உறவை உருவாக்கவும் பாடுபட்டு வருகிறது. இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை குறித்து, பி.சி.எஸ்.பி.ஐ., ஆய்வு செய்து, தர பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், மொத்தமுள்ள, 51 வங்கிகளில், 12 வங்கிகள் தான், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றிலும், பொதுத் துறையில், ஐ.டி.பி.ஐ., வங்கி மட்டுமே இடம் பிடித்துள்ளது.
இதர வங்கிகள், தனியார் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவை ஆகும். இந்த பட்டியலில், ஆர்.பி.எல்., வங்கி, 95 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், ஆக்சிஸ், எச்.டி.எப்.சி., –டி.சி.பி., – இண்டஸ்இண்ட், கோட்டக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., – யெஸ், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, எச்.எஸ்.பி.சி., – சிட்டி ஆகிய வங்கிகள் உள்ளன.
கவலை அளிக்கிறதுகடந்த நிதியாண்டில், வங்கி நடைமுறைகளை பின்பற்றுவதில், பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சில வங்கிகள், சராசரிக்கு மேற்பட்ட நிலையில் இருந்து உயர்வு நிலைக்கும், சராசரியில் இருந்து சராசரிக்கு மேற்பட்ட நிலைக்கும் சென்றுள்ளன. இருந்த போதிலும், வங்கிகளின் சராசரி புள்ளி, 78லிருந்து, 77 ஆக சரிவடைந்திருப்பது கவலை அளிக்கிறது.
– ஏ.சி.மகாஜன், தலைவர், பி.சி.எஸ்.பி.ஐ.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|