பதிவு செய்த நாள்
15 ஜூன்2017
23:49
புதுடில்லி : முகவர்களிடம் இந்திய நிறுவனச் சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், 87 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
முகவர்கள், குறிப்பிட்ட தொகைக்கு குறைவாக, கார்களை விற்பனை செய்யக் கூடாது, பரிந்துரைக்கப்பட்ட மசகு எண்ணெய், இன்ஜின் ஆயில் ஆகியவற்றையே, அவர்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, ஹூண்டாய் விதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விபரங்களை, முகவர்களிடம் பெற்றதை அடுத்து, மூன்று ஆண்டுகளில், கார் விற்பனையின் சராசரி விற்றுமுதலில், 0.3 சதவீதம், அதாவது, 87 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த அபராதம் குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ள ஹூண்டாய் நிறுவனம், முழு விபரங்கள் கைக்கு வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியுள்ளது. நாட்டில், சீரான வர்த்தக நடைமுறைகளை கண்காணிக்கும் பணியை, சந்தை போட்டி கட்டுப் பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|