பதிவு செய்த நாள்
15 ஜூன்2017
23:50
மும்பை : உள்நாட்டைச் சேர்ந்த, பெர்ஜர் பெயின்ட்ஸ் நிறுவனம், வீடு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பெயின்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்தகட்டமாக, வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், புதிய தொழில்களில் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளது. தற்போது, வீடு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அலங்கார பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. எனவே, அந்த சந்தையில், பெர்ஜர் களமிறங்க உள்ளது. இதற்கு, நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் ஒப்புதல் கேட்கப்படும். ஒப்புதல் கிடைத்ததும், கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, புதிய தொழில்களில் பெர்ஜர் களமிறங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|