பதிவு செய்த நாள்
15 ஜூன்2017
23:51
பெங்களூரு : இன்டெல் இந்திய பிரிவின் பொது மேலாளர் நிவ்ருதி ராய் கூறியதாவது: நிறுவனம், பெங்களூரில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை விரிவுபடுத்தவும், நவீன தொழிற்நுட்பங்களுடன், வடிவமைப்பு கட்டடத்தை அமைக்கவும், 1,100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 44 ஏக்கர் பரப்பில், நவீன தொழிற்நுட்ப அம்சங்களுடன், ஆய்வகம், சிறப்பு உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல வசதிகளை உடைய, வடிவமைப்பு கட்டடத்தை அமைக்க உள்ளோம்.
அதில், இணையம் சார்ந்த கருவிகளின் பயன்பாடு, ஸ்மார்ட் லைட்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட, பல சிறப்பம்சங்கள் இடம் பெறும். இந்த மையம், நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘‘இத்தகைய முதலீடுகள், வியக்கத்தக்க வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, நாட்டின், ஐ.டி., துறையை மேலும் வலுப்படுத்தும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|