பதிவு செய்த நாள்
15 ஜூன்2017
23:51
புதுடில்லி : பாமாயில் இறக்குமதி, மே மாதத்தில், 7.99 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக, எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா, மலேஷியா ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியா, பாமாயிலை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. மே மாதம், இந்தியா, 7.99 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 6.57 லட்சம் டன்னாக குறைந்திருந்தது. மே மாதம், நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 1.38 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 1.02 கோடி டன்னாக குறைந்திருந்தது. இந்தியாவின் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், பாமாயிலின் பங்கு, 64 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையே தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால், உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, இறக்குமதியை கட்டுப்படுத்த, கச்சா தாவர எண்ணெய் இறக்குமதிக்கு, அதிக சுங்க வரி விதிக்கமாறு, உற்பத்தியாளர்கள், மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|