பதிவு செய்த நாள்
15 ஜூன்2017
23:52
புதுடில்லி : மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம், அன்னிய வர்த்தக கொள்கையை உருவாக்குவது, ஏற்றுமதி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பின் பெரும்பான்மையான பணிகள், மின்னணு முறைக்கு மாறிவிட்டன. எஞ்சிய சில பணிகளும், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தவுடன், மாற்றப்பட்டு விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்த இயக்குனரகத்தை, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும், கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தில் இணைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை உருவாக்குவது, செயல்படுத்துவது என, இரு பணிகளையும் ஒரே அமைப்பில் மேற்கொள்ள முடியும். அதனால், இந்தியாவில் தொழில் துவங்குவது மேலும் சுலபமாகும். விரைவில், இந்த இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|