பதிவு செய்த நாள்
18 ஜூன்2017
05:20
புதுடில்லி : பொதுத் துறை வங்கிகள், வாராக்கடன் சுமையை சமாளிக்க, 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த இரு நிதியாண்டுகளில், மத்திய அரசு, 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது.இத்திட்டத்தில், ‘நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என, சமீபத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.இந்நிலையில், டில்லியில், ‘அசோசெம்’ கூட்டத்தில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா பேசியதாவது:இந்திய வங்கித் துறை, 8 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனில் சிக்கி உள்ளது. இதில், பொதுத் துறை வங்கிகளின் பங்கு மட்டும், 6 லட்சம் கோடி ரூபாயாகும். இத்தகைய சூழலில், நடப்பு நிதியாண்டிற்கு, மத்திய பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 10 ஆயிரம் கோடி ரூபாய் போதாது.வங்கிகளுக்கு கூடுதலாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். நிதியமைச்சருக்கும் இது புரிந்திருக்கும். அதனால் தான், தேவைப்பட்டால் கூடுதல் நிதியாதாரத்திற்கான வழிகள் ஆராயப்படும் என, தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|