பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
00:28
புதுடில்லி : அடுத்த ஆறு மாதங்களில், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு களைச் சேர்ந்த, 50 நிறுவனங்கள், இந்திய சில்லரை விற்பனை சந்தையில் களமிறங்க உள்ளன.
இந்த வகையில், கோரஸ், மிகடோ, இவிசு, வால்ஸ்டீரிட் இங்கிலிஷ், பாஸ்தா மேனியா, லஷ் அடிக் ஷன், மெல்ட்டிங் பாட், யோகர்ட் லேப் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில், 30 – 50 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளன. இந்நிறுவனங்கள், நாடு முழுவதும், 3,000 சில்லரை விற்பனை கடைகளை திறக்க முடிவு செய்துள்ளன.
இதற்காக, இந்நிறுவனங்கள், பிரான்சைஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஆசியாவில், சில்லரை விற்பனை துறைக்கான தீர்வுகளை, பிரான்சைஸ் இந்தியா நிறுவனம் அளித்து வருகிறது. இந்நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான பங்கு முதலீடுகளை திரட்ட உதவுதல், வர்த்தகத்தை துவக்குவதற்கான அனைத்து உரிமங்களையும் பெற்று தருதல் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|